ஆரியை வெளியேற்ற சூழ்ச்சி ஆரம்பம்.!! அறியாத ஆரி ரசிகர்கள் செய்யும் அட்டகாசம்..!!
ஆரி எது செய்தாலும் சரி என்ற மன நிலை அவரது ரசிகர்களுக்கு மாறும் வரை கண்டிப்பாக ஆரி தனது தவறை திருத்திக் கொள்ள மாட்டார் என பிக் பாஸ் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த போட்டியாளர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஆரி சிறப்பாக விளையாடுவதாக கூறியதுடன் வெளியே ஆரிக்கு ஆதரவு இருப்பதை மறைமுகமாக கூறிச் சென்றனர்.
தனக்கு வெளியே ஆதரவு இருப்பதை உணர்ந்த ஆரி இனி வரும் நாட்களில் சற்று குரலை உயர்த்துவார் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது அது நடந்துள்ளது. இன்றைய ப்ரோமோவில் இந்த வாரம் நாமினேஷன் இடம்பெறுகிறது.
இதில் ஆரி பாலாவின் பெயரை சொல்வதுடன் கடந்த வாரம் கேப்டன்சி சரியாக செய்யவில்லை என்கிறார். கடந்த வாரத்திற்கு கடந்த வாரமே நாமினேட் பண்ணி இருக்கலாமே, இந்த வாரம் பற்றி பேசுங்கள் என பாலா கூறியதற்கு நான் அப்படி தான் பேசுவேன், வாடா இங்க வந்து பேசுடா என ஆரி கத்துகிறார். உடனே எழுந்து வரும் பாலா நீங்கள் சொல்லும் எல்லாவற்றுக்கும் பேசாமல் இருந்தேன் இனியும் பேசாமல் இருக்க முடியாது என்கிறார். உண்மையில் இதில் பாலாவின் தவறு இல்லை.
ஆனால் ஆரி ரசிகர்கள் பாலாவை திட்டி தீர்க்க ஆரம்பித்துள்ளனர். ஆரி தவறு செய்யும் போது தவறு என்பதை ஆரி ரசிகர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. இது ஆரியை கெட்டவராக காட்ட தொலைகாட்சியின் சூழ்ச்சியாக கூட இருக்கலாம். பொறுத்து இருந்து பார்ப்போம்..!