பாலாவின் தந்தை மரணத்தின் பின் பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரி பாலாவிற்காக செய்த செயல்.!! பாராட்டும் ரசிகர்கள்.!!
பாலாஜியின் தந்தை மரணம் அறிந்து பலரும் தங்கள் அனுதாப செய்திகளை தெரிவித்து வருகின்றனர். சிலர் நேரடியாக சென்று பாலாஜிக்கு ஆறுதல் கூறியுள்ளனர். குறிப்பாக அர்ச்சனா, நிஷா, கேபி ஆகியோர் பாலாஜியின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறியுள்ளனர், அதே போல் சம்யுக்தா ஆஜித் இருவரும் நேரில் சென்று பாலாஜிக்கு ஆறுதல் கூறியுள்ளனர்.
படபிடிப்பு இருப்பதால் ரம்யா பாண்டியனால் நேரடியாக செல்ல முடியவில்லை, அதனால் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியுள்ளார். ஷிவானி எதுவும் சொல்லாமல் இருக்கிறார். இந்த நிலையில் ஆரி தனது டுவிட்டரில் கவலை படாதே, இந்த நேரத்தில் தைரியமாக இரு, இது சோதனை காலம், சோதனைகளின் போது தான் துணிவு தேவை.
துணிவாக இரு, நான் எப்போது உனக்கு நல்ல அண்ணனாக இருப்பேன், தைரியமாக இதை எதிர்கொள் என கூறியுள்ளார். அது மட்டும் இன்றி பாலாவிற்கு கால் செய்து ஆறுதல் கூறியுள்ளார். எதுவாக இருந்தாலும் என்னிடம் கூறு நான் உனக்கு உதவுவேன் என தெரிவித்துள்ளார்.!
இதனை பார்த்த ஆரி ரசிகர்கள் என்ன சொன்னலும் ஆரி ஆரி தான். எவ்வளவு திட்டு பாலா ஆரியை திட்டினார் ஆனால் பாலாக்கு ஒன்று என்றதும் நிக்கிறார், இது தான் ஆரி என் குறிப்பிட்டுள்ளனர்.!!