“வாழ்க்கை வெறுத்துவிட்டது” நடிகை பானுபிரியா எடுத்த முடிவு..! அன்றைய இளைஞர்களின் கனவு நாயகியா இப்படி.!?
நடிகை பானுபிரியா… தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த திறமையான நடிகை. மற்ற நடிகைகள் போல் இல்லாது அனைவரையும் கவரும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்ததோடு ஆடை விடையங்களிலும் அவதானம் செலுத்தினார். அதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவரது நடிப்புக்கு அடிமையானார்கள்.
தமிழ் தெலுங்கு கன்னடம் என அத்தனை மொழிகளிலும் நடித்து முடித்துவிட்ட நடிகை பானு பிரியா சினிமாவில் உச்சத்தில் இருந்தபோதே காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவரது திருமண வாழ்க்கை அத்தனை சிறப்பாக இருக்கவில்லை. வெறும் 7 வருடங்களே வாழ்ந்த நிலையில் கணவர் விவாகரத்து பெற்று பிரிந்து சென்றுவிட ஒரு குழந்தையுடன் தனியாக நின்றார்.
தனித்து நின்று அனைத்தையும் சமாளித்தார். பரத நாட்டிய கலைஞரான இவர் அதனால் அடிமையாகது வாழ்ந்தார். ஆனால் அண்மையில் இவருக்கு நீதி மன்றம் செல்லும் வகையில் விடயம் நடந்தது. அதாவது சிறுமியை வேலைக்கு வைத்தது அந்த சிறுமிக்கு பானுபிரியாவின் சகோதரன் பாலியல் தொல்லை கொடுத்தது என இரண்டு விடயங்களில் மாட்டிக் கொண்டார்.
இதனால் மனமுடைந்தார். கடந்த கால வாழ்க்கை பற்றி கேட்டதற்கு பட்டாம் பூச்சி போல் வாழ ஆசைப்பட்டேன் ஆனால் சிறகு உடைத்து வீசிவிட்டார்கள். முன்பு போல் இல்லை. அதிக கோவப்படும் என்னிடம் இப்போது கோபம் சிறிதும் இல்லை, பொறுமையாய் இருக்கிறேன். இந்த வாழ்க்கை வெறுத்துவிட்டது. மகள் மகிழ்ச்சியுடன் வாழும் போது மரணம் வந்தாலும் ஏற்றுக் கொள்வேன் என கூறினார். இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்த பானு பிரியாவிற்கா இந்த நிலமை என ரசிகர்கள் சோகத்தில் இருகின்றனர்..!