“பிக் பாஸ் வீட்டில் இருக்கும் டம்மி பீஸுகளை வெளியேற்றுங்கள்” பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தயாராகும் பிரேம்ஜி அமரன் மற்றும் நடிகர் பரத்.!!
பிக் பாஸ் நிகழ்ச்சி சூடு பிடிப்பது போல் ஆரம்பமாகி பின் புஸ்வானமாகி போகிறது, ப்ரோமோவை பார்த்துவிட்டு ஆஹா இன்று வீட்டிற்குள் செம்ம சண்டையை எதிர் பார்க்கலாம் என நினைத்து நிகழ்ச்சியை பார்த்தால் ஏதும் இருக்காது, எடிட்டர் செய்யும் செயல் ப்ரோமோ மட்டும் தான் விறுவிறுப்பு. இதனால் பிக் பாஸ் பார்க்கும் பிரபலங்கள் பலருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி மீது வெறுப்பு.
இதனால் பலரும் இணையதளத்தில் பிக் பாஸ் சீசன் ஒன்று மற்றும் மூன்றை போல் எந்த சீசனும் பார்க்கவில்லை, சீசன் 2 கூட ஓரளவு நன்றாகவே இருந்தது ஆனால் சீசன் நான்கில் பார்க்கும் படியாக யாரும் இல்லை, பாலாஜி ஆரி சண்டை தான் ஏதோ கொஞ்சம் நிகழ்ச்சியை எடுத்துச் செல்கிறது என கூறி வருகின்றனர். இதனை பிரபல நடிகரான பரத் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்க அதற்கு பிரேம்ஜி அமரன் கருத்து கூற இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி உள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்து கடுப்பான பரத் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் டம்மி பீஸுகள் எல்லோரையும் வெளியே அனுப்புங்கள். என கூற இதற்கு பதில் அளித்துள்ள பிரேம்ஜி ஆம் பார்க்கவே முடியவில்லை, நாம் போகலாமா என கேட்டுள்ளார்.
அதற்கு பரத் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல ஆசை இருக்கிறதா உங்களுக்கு என கேட்டுள்ளார், பதில் அளித்துள்ள பிரேம்ஜி நீங்கள் போக விருப்பம் என்றால் நானும் தயார்,சென்று போட்டி என்றால் என்ன என்று காட்டிவிட்டு வருவோம் என தெரிவித்துள்ளார்.
இந்த உரையாடல் இணையத்தை கலக்க வீட்டில் எதுக்கும் பிரயோசனம் இல்லாமல் இருக்கும் நிஷா, ஷிவானி, ரியோ, அர்ச்சனா, கேப்ரியலா, ஜித்தன் ரமேஷ், சோம் சேகர்,ஆஜித், ஆகியோரை வெளியே அனுப்புங்கள்,பிக் பாஸ் நிகழ்ச்சி உருப்படும், பரத் பிரேம்ஜி போன்றோர் வந்தால் நிச்சயம் விறுவிறுப்பாக நிகழ்ச்சி இருக்கும் என தெரிவித்துள்ளனர்.!!
Can all the dummy pieces be eliminated from #BB4Tamil asap as I see no content from them !! ?@vijaytelevision #justsaying #fanofbigbosstamil
— bharath niwas (@bharathhere) November 25, 2020
Bro shall we both go in ?
— PREMGI (@Premgiamaren) November 25, 2020