கணவரின் நண்பன் மீதான மோகம், மனைவி செய்த கொடூர செயல். துடிதுடித்து இறந்து போன அப்பாவி கணவர்.!!
கணவனின் நண்பனை நேசித்ததால் கணவனை கொடூரமாக கொலை செய்த மனைவி தொடர்பான செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகாவை சேர்ந்தவர் பிரதீப். இவருக்கு ரோகிணி என்ற பெண்ணை பெற்றோர் 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தனர். பிரதீப் ரோகினி ஜோடிக்கு 10 மற்றும் 7 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் பிரதீப்பின் நண்பரான ஸ்ரீனிவாசன் அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். பிரதீப்பிற்கு குடி பழக்கம் உள்ளதால் ஸ்ரீனிவாசன் மற்றும் பிரதீப் இருவருமே குடிப்பார்கள். இந்த நிலையில் ஸ்ரீனிவாசன் மீது ரோகிணிக்கு காதல் ஏற்பட இருவரும் கள்ளக் காதல் செய்ய ஆரம்பித்துள்ளனர். இது ஆரம்பத்தில் பிரதீப்பிற்கு தெரியாத போதும் பின் குழந்தைகள் மற்றும் மனைவியின் உறவினர்களால் தெரியவந்தது.
இதனால் ஸ்ரீனிவாசனை வீட்டிற்கு வர வேண்டாம் என கூறிய பிரதீப் மனைவியையும் கண்டித்தார். இதனால் கடுப்பான ரோகிணி ஸ்ரீனிவாசனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். சம்பவ தினத்தன்று கணவருக்கு நன்றாக மதுவை ஊற்றி கொடுத்துள்ளார். மனைவியை நம்பி நன்றாக குடித்த பிரதீப் போதையில் நிலை தடுமாறி உள்ளார்.
குழந்தைகளை உறவினர் வீட்டிற்கு அனுப்பிய ரோகிணி ஸ்ரீனிவாசனை வீட்டிற்கு அழைத்துள்ளார். பின் இருவரும் சேர்ந்து பிரதீபின் மார்பில் ஏறி மிதித்தும் கழுத்தை நெரித்தும் கொலை செய்துள்ளனர். வாயில் இரத்தம் வடிந்த நிலையில் பிரதீப் இறந்து போக ஸ்ரீனிவாசன் வீட்டை விட்டு வெளியேறி உள்ளான். இந்த நிலையில் கணவர் இறந்துவிட்டதாக ரோகிணி கதறி அழுதுள்ளார்.
அயலவர் பொலீஸாருக்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக பிரதீப்பின் உடல் வைத்தியசாலைக்கு அனுப்பப் பட்டது. இதனை தொடர்ந்து ரோகிணியிடம் விசாரணை நடத்தப் பட்டது, இதன் போது ரோகிணி முரணாக பதில் கூறியதை தொடர்ந்து பொலீஸார் தீவிர விசாரணை செய்துள்ளனர். இதில் கள்ளக் காதலனை சந்திக்கவிடாத கணவரை கொலை செய்ததாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து ரோகிணியை பொலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.!!