தினமும் இதில் சிறிதளவு குடியுங்கள், ஏன் தெரியுமா.?படித்து பாருங்கள், பிடித்தால் பகிருங்கள்.!!
புரட்சி வானொலி நேயர்களுக்கு வணக்கம். நாம் அன்றாடம் அவதிப் படும் நோய்களில் மிகவும் கொடுமையான நோய் என்றால் அது முதுகு வலி தான். கணனியோ காடோ எங்கு வேலை செய்தாலும் பாகுபாடின்றி முதுகு வலி தொற்றிக் கொள்ளும் அனைவருக்கும் வலி ஒன்று தானே.. என்ன தான் கிரமம் நகரம் என இருந்தாலும் ஆங்கில மருத்துவங்களை விட இயற்கை மருத்துவமே சிறந்ததாகிறது. இதற்கு நாம் அன்றாடம் பயன்படுத்தும் சில பொருட்களை கொண்டு முதுகு வலியை தீர்த்துக் கொள்ளலாம். வாங்க பார்க்கலாம்.!
இஞ்சி எல்லோர் வீட்டிலும் சாதாரணமாக இருக்க கூடியது. இதனை கொண்டு இடுப்பு வலியை எப்படி தீர்ப்பது என பார்க்கலாம். சிறிது இஞ்சி சாறை எடுத்து முதுகில் வலி உள்ள இடத்தில் சூடு வரும் வரை காலை மற்றும் மாலை பூசிவிட்டு தேய்த்து பின் 20 நிமிடங்கள் அப்படியே விட்டு விட்டு கழுவி விடுங்கள்.இப்படி தொடர்ந்து ஒரு வாரம் செய்துவர வலி நீக்கி விடும்.
பசும் பால் எடுத்து காய்ச்சி மிதமான சூட்டில் இஞ்சி சாறு ஒரு கரண்டி, மஞ்சள் சிறிதளவு மிக்ஸ் செய்து இரவில் உறங்குவதற்கு முன் குடித்து வர முதுகு வலி குணமாகும்.அடுத்து துளசி. இதனை வைத்து எப்படி மருந்து செய்வது என பார்க்கலாம். முதலில் துளசி இலைகளை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள்.
ஒரு கப் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் துளசி இலைகளை போட்டு அதனுடன் சிறிது கல் உப்பு சிறிதளவு சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து வடித்து எடுங்கள். தினமும் காலையில் குடித்து வர முதுகு வலி குணமாகிவிடும்.!அத்துடன் உறங்கும் முன்பு வெதுவெதுப்பான நீரில் உடலை வாஷ் செய்துவிட்டு தூங்குங்கள். முடிந்த அளவு உணவில் நல்லெண்ணை பயன்படுத்துங்கள்.
பேக்கரி உணவு, பாஸ்ட் பூட் சாப்பிடுவதை தவிர்த்துவிடுங்கள். பெரிய வெங்காயத்திற்கு பதில் சின்ன வெங்காயத்தை உணவில் சேருங்கள். கிழங்கு பருப்பு உணவில் எடுத்துக் கொள்வதை தவிர்க்கலாம். உழுந்து, பயறு போன்றவை சேர்த்துக் கொள்ளலாம். பூண்டு, இஞ்சி போன்றவற்றை உணவில் தினமும் சேர்த்து வருவது மிகவும் சிறந்த விடயமாகும்.!