காய்ச்சல் மற்றும் அடி வயிறு வலியால் அவஸ்த்தை படுகின்றீர்களா.? இதை ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.!!
புதினா இலைகளை பெரும்பாலும் சிலர் உணவில் சேர்ப்பதில்லை. இதற்கான காரணம் புதினா இலையில் இருந்து வரும் ஒரு வித வாடை சிலருக்கு பிடிப்பதில்லை.ஆனால் புதினா இலையில் இருக்கும் நன்மைகள் வேறு எதிலும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
இன்று நாம் புதினா இலையில் இருக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம். அடி வயிறு வலி, மலம் சீதமாக போதல், போன்றவற்றிக்கு புதினா இலைகள் 5 எடுத்து நன்றாக கழுவிவிட்டு ஒரு அரை கப் நீர் விட்டு மிக்ஸியில் நன்றாக அரைத்து வடித்துக் கொள்ளுங்கள். இதில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து குடியுங்கள் அடி வயிறு வலி நொடியில் தீர்ந்து விடும்.
மாதவிடாய் காலத்தின் போது சில பெண்களுக்கு உதிரம் கட்டி கட்டியாக போகும். இது ஆபத்தானது. இதனால் கர்ப்ப பையை அறுவை சிகிச்சை செய்து வைத்தியர்கள் அகற்றும் அபாயங்கள் கூட ஏற்படும். இதற்கு புதினா இலை தீர்வாகிறது . சுத்தமான தேங்காய் எண்ணெய்யில் புதுனா இலைகளை வதக்கி மாதவிடாய் நாட்களில் உணவுடன் எடுத்துக் கொண்டால் இரத்தப் போக்கு குறைந்து நல்ல பயன் கிடைக்கும்.
சிலருக்கு ஒற்றைத் தலை வலி உயிரை எடுக்கும் இதற்கு புதினா இலைகளை அரைத்து துணி ஒன்றில் வைத்து நெற்றியில் பத்து போல் போட்டால் வலி நொடியில் தீந்துவிடும்.மூட்டு வலி உள்ளவர்கள் தினமும் புதினா கீரை உணவில் சேர்த்துக் கொண்டால் போதுமானது.
உடல் எடை குறைக்க ஆசை படுபவர்கள் புதினா இலைகளுடன் மல்லி விதைகளை இரவில் ஊற வைத்து பின் காலையில் கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். காய்ச்சல் வந்த உடல் அலுப்பு தீர புதினா நீர் குடித்து வந்தால் போதுமானது. என்ன பிரண்ட்ஸ் இந்த குறிப்பு பிடித்திருக்கா அப்பிடீன்னா உங்கள் பிரண்ட்ஸ் உறவுகளுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்..!