இன்றைய ராசிப்பலன் – 20.01.2022
இன்றைய பஞ்சாங்கம், 20-01-2022, தை 07, வியாழக்கிழமை, துதியை திதி காலை 08.05 வரை பின்பு தேய்பிறை திரிதியை. ஆயில்யம் நட்சத்திரம் காலை 08.24 வரை பின்பு மகம். சித்தயோகம் காலை 08.24 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
மேஷ ராசி நேயர்களே:நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும்.குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.பிள்ளைகளின் உயர்கல்வி உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். உறவினர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறுமை அவசியம்.உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும்.
ரிஷப ராசி அன்பர்களே:தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து செல்லும்.அரசாங்கக் காரியங்கள் சாதகமாக முடியும்.பிள்ளைகள் வழியில் வீண் செலவுகள் ஏற்படும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.உத்தியோகத்தில் அதிகாரிகளால் மனஉளைச்சல்கள் உண்டாகும். தந்தைவழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும்.தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
மிதுன ராசி காரர்களே:உடன் பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். சிலருக்கு உறவினர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்புள்ளதால் அவர்களுடன் பேசும்போது வார்த்தைகளில் நிதானம் தேவை.திர்பார்த்த உதவிகள் தடையின்றி கிடைக்கும். தந்தையுடன் அனுசரணையாக நடந்துகொள் ளவும்.
கடக ராசி நேயர்களே:செலவுகளைச் சமாளிப்பதில் சிரமம் எதுவும் இருக்காது. அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். நண்பர்களிடமிருந்து எதிர்பார்த்த தகவல் கிடைக்கும். நெருங்கியவர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும்.வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டு.நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். நண்பர்கள் மூலம் பணவரவு உண்டாகும்.பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும்.
சிம்ம ராசி அன்பர்களே:கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக் குகள் நீங்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.உறவினர்களால் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் சாதுர்யமாகச் சமாளித்துவிடுவீர்கள்.வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.எந்த வேலையிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள்.கணுக்கால் வலிக்கும்.
கன்னி ராசி காரர்களே:பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். தொலைதூரத்திலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.குடும்பத்தில் பெண்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கிடைக்கும்.விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.எடுத்த காரியத்தை முடிப்பதற்கு சில இடையூறுகள் ஏற்படலாம்.
துலாராசி உறவுகளே:பெற்றோர் பக்கபலமாக இருப்பார்கள்.பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். நீண்ட நாட்களாக வராத கடன்கள் வசூலாகும்.எதிரிகள் வகையில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர் மூலம் கிடைக்கும் செய்தி மகிழ்ச்சி தரும்.வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.
விருச்சிக ராசி நேயர்களே:மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது கவனமாக இருக்கவும். சிலருக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டா லும் பாதிப்பு எதுவும் இருக்காது. அனுபவபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவர்வீர்கள். வீட்டின் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும்.
தனுசு ராசி அன்பர்களே:பாதியில் நின்ற வேலைகள் முடியும்.குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலையே காணப்படும்.மதியத்திற்கு பிறகு மன அமைதி உண்டாகும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். கணவன் மனைவிக்குள் இருந்த மணப்போர் நீங்கும் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். பிள்ளைகளால் பெருமை சேரும்.
மகர ராசி காரர்களே:ராசிக்கு காலை 08.24 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் செலவுகளைச் சமாளிக்க கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் சில ருக்கு ஏற்படும்.உங்களை யாரும் கண்டுகொள்வதில்லை உங்களுக்கு யாரும் முக்கியத்துவம் தருவதில்லை என்றெல்லாம் புலம்புவீர்கள். எதிர்பார்த்த பணம் கிடைப்பது தாமதமாகும்.பயணங்களை தள்ளி வைக்கவும். சிலருக்கு பணிச்சுமை அதிகரிக்கும். குடும்பப் பெரியவரின் அறிவுரை பயனுள்ளதாக இருக்கும்.
கும்ப ராசி உறவுகளே:கல்யாண பேச்சு வார்த்தை வெற்றி அடையும். தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும்.கல்யாண பேச்சு வார்த்தை வெற்றி அடையும். சிலருக்கு நண்பர்கள் மூலம் பணவரவு கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.செய்யும் வேலைகளில் ஆர்வத்தோடு ஈடுபடுவீர்கள்.
மீன ராசி நேயர்களே:
அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பிள்ளைகள் வழியில் எதிர்பாராத செலவு களும் ஏற்படக்கூடும்.சிலருக்கு தொழில் ரீதியாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். அவர்களின் உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தவும்.குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். நண்பர்களால் சிற்சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும்.பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள்.