மூச்சுத்திணறல் மற்றும் சுவாசப் பிரச்சனைகளை நீக்கி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சூப்பர் டிப்ஸ்.! பகிர்ந்து அனைவருக்கும் தெரிய படுத்துங்கள்.!
தற்போது அனைவருக்கும் தேவையான உணவுகள் என்றால் பீட்ஸா பர்கர் அல்ல, சத்துள்ள நோயெதிர்ப்பாற்றல் அதிகரிக்கக் கூடிய உணவுகள் தான். முடிந்த வரை இயற்கை உணவுகளை எடுத்துக் கொள்ளும்படி வைத்தியர்கள் ஆலோசனை வழங்குகின்றனர். கீரை வகைகள், தானிய வகைகள், மீன், முட்டை, பழங்கள் என டாக்டர்கள் பரிந்துரை செய்கின்றனர்.
ஆனால் ஒரு நேரம் உணவு கிடைத்தால் போதும் என நினைக்கும் மக்களால் அதிக விலை கொடுத்து உணவு பொருட்களை வாங்குவது முடியாத காரணமாகும். அதனால் எமக்கு கிடைக்க கூடிய உணவுகள் மூலம் நோய்களை தடுக்கும் முறைகளை பார்க்கலாம். இன்றைய நாட்களில் முதலில் நாம் தடுக்க வேண்டியது சுவாசப் பிரச்சனைகளை தான். எமது நுரையீரல் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
அதற்கு முடிந்த வரை முடக்கத்தான் மிளகு ரசத்தை சாதத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள். குடிக்கவும் முடியும் என்றாலும் சாதத்தில் சேர்த்துக் கொள்ளும் போது கறியாகவும் மாறி விடுகிறது. அடுத்து சுவாசப் பிரச்சனைகளில் இருந்து உங்களை காப்பாற்றிக் கொள்ள முசுமுசுக்கை இலைகள் 10, தூதுவளை இலைகள் 10 சிறிதளவு உப்பு, காய்ந்த மிளகாய் 5, வெள்ளைப் பூண்டு 3 பல்லு, எடுத்து கழுவி துவையல் போல் அரைத்து உணவுடன் சாப்பிடுங்கள்.
இதில் எதையும் எண்ணை ஊற்றி வறுக்க வேண்டாம். இது ஆஸ்துமா உட்பட பல சுவாசப் பிரச்சனைகளுக்கு தீர்வாகிறது. அடுத்து பரட்டைக் கீரை, தூதுவளை, முசுமுசுக்கை மூன்றையும் சம அளவு எடுத்து உலர்த்தி பொடியாக்கி வைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடியில் சிறிதளவு எடுத்து தேன் கலந்து காலை மாலை சாப்பிட்டு வாருங்கள், இது மூச்சுத் திணறல் பிரச்சனைக்கு சிறந்த தீர்வாகும்.
நாளொன்றுக்கு ஒரு முறை மல்லி விதை போட்டு கொதிக்க வைத்து மல்லி நீர் குடியுங்கள். இதனை காலை அல்லது மாலை தேனீர் வேளைக்கு கூட குடிக்கலாம். இஞ்சி, பூண்டு, எழுமிச்சை சிறிய துண்டு, உப்பு சிறிதளவு, காரத்திற்கு மிளகு சிறிதளவு சேர்த்து காய் கறிகள் சேர்த்து சூப் செய்து குடியுங்கள், இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் சுவாசப் பிரச்சனைகளை தீர்க்கிறது.
வாரம் இரண்டு முறை மிதமான சுடு நீரில் உப்பு சேர்த்து தொண்டைகுழி வரை அந்த நீரை எடுத்து வாய் கழுவுங்கள். தேனீர் அல்லத் பானங்களை சூடாக குடியுங்கள். முடிந்த வரை குளிர்பானங்களுக்கு குட் பாய் சொல்லுங்கள்.!/