நான் நடிகை தான் அதற்காக என் படுக்கை அறை, மற்றும் குளியல் அறையில் கேமரா வைப்பதை ஏற்க முடியாது, அதனால் மறுத்துவிட்டேன்! அதிரடி காட்டிய நடிகை பூமிகா. பாராட்டும் ரசிகர்கள்.!!
நான் உறங்குவதையும், குளியலறை செல்வதையும், காலையில் எழுந்திருப்பதையும் கேமராக்கள் வீடியோ செய்வதை நடிகையாக இருந்தாலும் என்னால் ஏற்க முடியாது என நடிகை பூமிகா கூறி இருப்பது ரசிகர்களின் பாராட்டை பெற்றுள்ளது. ரோஜாக்கூட்டம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான பூமிகா பத்ரி, சில்லுன்னு ஒரு காதல் போன்ற திரைப்படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டார்.
ஒரு சில திரைப்படங்களில் நடித்துவிட்டு திருமணம் முடித்து சினிமாவை விட்டு ஒதுங்கினார். அடிக்கடி இணைய தளங்களில் தலைகாட்டும் பூமிகா ஹிந்தி பிக் பாஸில் கலந்துகொள்ளப் போவதாக செய்திகள் வெளியானது. இது குறித்து ரசிகர்கள் பூமிகாவிடம் கேட்ட போது சீசன் 1,2,3 என தொடர்ந்து கேட்டார்கள்.
ஆனால் நான் மறுத்துவிட்டேன்.இம்முறை கேட்கவில்லை கேட்டாலும் செல்ல மாட்டேன். நான் நடிகை தான் ஆனலும் என் படுக்கை அறையில் கேமரா வைத்து வீடியோ எடுப்பது எனக்கு பிடிக்காது என கூறியுள்ளார்.!