நாசா உதவியுடன் விண்வெளியில் ஒலிக்கப் போகும் இசைஞானி இளையராஜாவின் பாடல்.! கொண்டாடும் ரசிகர்கள்.!!
இசை கடவுள் என ரசிகர்களால் கொண்டாடப் படும் இசைஞானி இளையராஜாவின் பாடல்கள் விண்ணில் ஒலிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. 60களின் பின்னான காலப் பகுதியில் தமிழ் சினிமாவில் நுழைந்த இசைஞானி இளையராஜா அவர்கள் இன்று வரை ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து வருகின்றார்.
கோவக்காரரான இளையராஜா சில நேரங்களில் சர்ச்சைகளில் சிக்கி அவர் மீது ரசிகர்களுக்கு கோபம் வந்தால் கூட அவரது இசை மீது யாருக்கும் கோபம் வருவதில்லை, அவரது இசை இன்று வரை பலரை தாலாட்டிக் கொண்டிருக்கின்றது என்றால் அது தான் உண்மை.
இந்த நிலையில் மண்ணில் மட்டும் இன்றி விண்ணிலும் இசைஞானியின் பாடல் ஒலிக்க நாசா முடிவு செய்துள்ளது, அதன் படி “நாசா உதவியுடன் விண்ணில் ஏவப்பட்டுள்ள உலகின் மிக எடை குறைவான சேட்லைட் மூலம் இசைஞானியின் பாடல் விண்வெளியில்” ஒலிக்கப் போவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
இதனை ஒவ்வொரு இசைஞானி ரசிகன் மட்டும் இன்றி ஒவ்வொரு இந்தியரும் மகிழ்ச்சி அடையாளம். இந்த மகிழ்ச்சியான நாளுக்காக காத்திருப்போம், இது தொடர்பான தகவல் இனி வரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகின்றது.!