இன்றைய ராசி பலன் – 27.11.2020
இன்றைய பஞ்சாங்கம், 27-11-2020, கார்த்திகை 12, வெள்ளிக்கிழமை, துவாதசி திதி காலை 07.47 வரை பின்பு வளர்பிறை திரியோதசி. அஸ்வினி நட்சத்திரம் இரவு 12.22 வரை பின்பு பரணி. அமிர்தயோகம் இரவு 12.22 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பிரதோஷ விரதம். சிவ வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00
மேஷ ராசி நேயர்களே:
திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் வாழ்க்கைத் துணைவழி உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்படும்.உதவி கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை நல்லபடி முடியும்.பணவரவு தாராளமாக இருக்கும். உடல்நலனில் கவனமாக இருக்கவும்.வேலையாட்களிடம் பணிவாகப் பேசி வேலை வாங்குங்கள். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.
ரிஷப ராசி அன்பர்களே:
வீட்டில் பெண்கள் தம் பொறுப்பறிந்து நடந்து கொள்வார்கள். எதிரிகள் வகையில் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த காரி யம் அனுகூலமாக முடியும். ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் கரையும். முக்கியப் பிரமுகர்களின் தொடர்பு கிடைக்கும்.தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். மூத்த சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
மிதுன ராசி காரர்களே:
குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். புதிய முயற்சி அனுகூலமாக முடியும். மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன் யம் அதிகரிக்கும்.காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். போன் மூலம் சுபச்செய்தி ஒன்று கிடைக்க வாய்ப்பு உண்டு.
கடக ராசி நேயர்களே:
உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். தந்தைவழி உறவினர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும்.அரசு வழி உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். சிலருக்கு தெய்வ வழி பாடுகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.வேலையில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவர். உறவினர்களால் சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது.
சிம்ம ராசி அன்பர்களே:
உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.மனதில் அடிக்கடி குழப்பம் ஏற்படக்கூடும்.டும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரி யம், வீண் அலைச்சலையும் செலவுகளையும் கொடுக்கும்புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். நண்பர் கள் உதவி கேட்டு வருவார்கள். சாலைகளை கவனமாக கடந்து செல்லுங்கள்.
கன்னி ராசி காரர்களே:
ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களுடன் பேசும்போது வார்த்தைகளில் நிதா னம் தேவை.கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தாயின் உடல்நலனில் அக்கறை காட்டவும். எதையோ இழந்ததை போல் இருப்பீர்கள். வாழ்க்கைத்துணையால் சில பிரச்னைகள் ஏற்படும்.அடுத்தவர்களை குறை கூறி கொண்டிருக்காமல் உங்களை மாற்றி கொள்ளப் பாருங்கள். வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கை யாக இருக்கவும்.
துலாராசி உறவுகளே:
பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பு கிடைக்கும்.மனைவி வழியில் நல்ல செய்தி வரும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். நண்பர் கள் உதவி கேட்டு வருவார்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்துலாபம் ஈட்டுவீர்கள். வியாபாரத்தில் பணியாளர்களால் தர்மசங்கடமான நிலைமை ஏற்படும்.
விருச்சிக ராசி நேயர்களே:
நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். தாய்வழி உறவு களுக்காக செலவு செய்யவேண்டி வரும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.சிலருக்கு அவ்வப்போது மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்பட்டு நீங்கும். உறவினர்கள் நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள்.
தனுசு ராசி அன்பர்களே:
சிலருக்கு எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படலாம். நீண்டநாளாகத் தொடர்பில் இல்லாத நண்பர்கள் தொடர்பு கொண்டு பேசுவார்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
மகர ராசி காரர்களே:
பணப்புழக்கம் அதிகரிக்கும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும், அவர்களால் ஆதாயமும் ஏற்படக்கூடும்.பிள்ளைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படக்கூடும்.உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். வியாபாரம் தொடர்பான வீண் அலைச்சலும், செலவுகளும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
கும்ப ராசி உறவுகளே:
வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைக்கும்.கலைப் பொருட்கள் வாங்குவீர்கள்.சிலருக்குக் குடும்பத்துடன் குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும்.குடும்பத்தில் உடன்பிறப்புகளுடன் ஒற்றுமை பலப்படும். சிலருக்கு உடல் ஆரோக்கி யத்தில் கவனம் தேவை.
மீன ராசி நேயர்களே:
திருமண சுபமுயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.எந்த காரியத்தையும் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி பெறலாம். வாழ்க்கைத்துணை யால் ஆதாயம் உண்டாகும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். தாய்மாமன்வழியில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். சிலருக்கு வெளியூரில் இருந்து எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.