திடீரென பாரதி கண்ணம்மா சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம்.! கடுப்பில் சீரியலில் இருந்து விலகிய கண்ணம்மா.!!
பாரதி கண்ணம்மா சீரியலில் கதையை மாற்றியதால் சீரியலை விட்டு ரோஷினி விலகிவிட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது. பாரதி கண்ணம்மா சீரியல் ஆரம்பமாகி சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் ரோஷினியின் விலகல் மிகப் பெரிய தாக்கம் ஒன்றை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப் படுகின்றது,
ஏற்கனவே சீரியலில் இருந்து அகிலன் கதாபாத்திரம் விலகியதை தொடர்ந்து புதியவர் நடித்து வருகின்றார்.வெண்பா நிறைமாத கர்ப்பமாக இருப்பதால் சீரியலில் இருந்து சில நாட்களுக்கு விலகப் போவதாக தெரிவித்தார். இது ஒரு பக்கம் இருக்க ஹீரோயினாக நடித்து வந்த ரோஷினி விலகப் போவதாக அறிவித்துள்ளார்.
இதனால் பாரதி கண்ணம்மா சீரியலின் டி ஆர் பி குறையத் தொடங்கியுள்ளது. முதலில் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினிக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்ததால் செல்கிறார் என கூறப்பட்டது. ஆனால் ஆரம்பத்தில் கூறப்பட்ட சீரியல் கதையை தற்போது மாற்றிவிட்டனராம்.
முதலில் கதை பிடித்திருந்ததால் நடித்து வந்த ரோஷினி கதையை மாற்றியதால் சீரியலில் இருந்து விலகியுள்ளார்.இந்த விடயம் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.!