இன்றைய ராசி பலன் – 25.10.2021
இன்றைய பஞ்சாங்கம்,25-10-2021, ஐப்பசி 08, திங்கட்கிழமை, நாள் முழுவதும் தேய்பிறை பஞ்சமி திதி. மிருகசீரிஷம் நட்சத்திரம் பின்இரவு 04.10 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. தனிய நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
மேஷ ராசி நேயர்களே:இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். சிறிய அளவில் உடல்நலம் பாதிக்கப்பட்டாலும், எளிய சிகிச்சையினால் உடனே சரியாகிவிடும்.பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். உறவி னர்களுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் நீங்கி சுமுக உறவு ஏற்படும்.கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள்.
ரிஷப ராசி அன்பர்களே:அனுபவமுள்ளவர்களின் அறிவுரைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.குடும்பத்தில் உறவினர்களால் செலவுகள் ஏற்பட்டாலும் அதனால் மகிழ்ச்சியே ஏற் படும்.சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள்.
மிதுன ராசி காரர்களே:ரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள்.வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு குறையக் கூடும்.குடும்பத்தில் கோபத்தை காட்டாதீர்கள். சிலருக்குக் கடன் வாங்கவேண் டிய சூழ்நிலையும் ஏற்படும்.
கடக ராசி நேயர்களே:தந்தை யிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும்.சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படும்.சுபகாரிய முயற்சிகளில் சிறு தடை தாமதங்கள் ஏற்படலாம். வாழ்க்கைத் துணையின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள்.வேலையில் சிலருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிட்டும். வெளியூரில் இருக்கும் நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.
சிம்ம ராசி அன்பர்களே:உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். உறவினர்கள் உதவியுடன் சுபநிகழ்ச் சிக்கான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நீண்டநாள்களாக எதிர்பார்த்த பணம் இன்று கிடைக் கும்.உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.நண்பர்களால் அனுகூலம் கிட்டும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும்.
கன்னி ராசி காரர்களே:உறவினர்கள் வீடு தேடி வருவார்கள்.சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க நேரிடும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். பிள்ளைகள் நீண்டநாள்களாகக் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வியா பாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும்.குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும்.இல்லத்தில் மங்கள நிகழ்ச்சிகள் நடைபெறும்.
துலாராசி உறவுகளே:ராசிக்கு பகல் 02.36 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களால் மறை முகத் தொல்லைகளும், விமர்சனங்களும் ஏற்படக்கூடும்.குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை, பிள்ளைகளால் மன உளைச்சல் உண்டாகும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதாக இருந்தால் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது.ஆரோக்கிய ரீதியாக சிறு பாதிப்புகள் ஏற்படும்.
விருச்சிக ராசி நேயர்களே:ராசிக்கு பகல் 02.36 முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் இனந்தெரியாத சின்னச் சின்ன கவலைகள் வந்து போகும்.உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருப்பது நல்லது.
தனுசு ராசி அன்பர்களே:வாழ்க்கைத்துணை மூலம் எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு.பழைய கடன் பிரச்னைகள் தீரும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக் கும். வேற்றுமதத்தவர்கள் அறிமுகமாவார்கள்.பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும்.
மகர ராசி காரர்களே:சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரும்.உடல் ஆரோக்கியம் சீராகும். வயிறு தொடர்பான பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள்.சிலருக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்க வாய்ப்பு உண்டு.
கும்ப ராசி உறவுகளே:குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குங்கள். உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.முக்கிய முடிவு எடுப்பதில் பொறுமை அவசியம்.
மீன ராசி நேயர்களே
உறவினர்கள் வீடு தேடி வருவார்கள்.சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது.நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த அரசு வழி உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.