பிக் பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் ஆரியை அவமானப் படுத்திய பிக் பாஸ் சீசன் 5 குழு.! சோகத்தில் ஆரி போட்ட பதிவு.!
பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகி இறுதிக் கட்டத்தில் உள்ள நிலையில் நாளைய தினம் வெற்றியாளர் அறிவிக்கப் பட உள்ளார். பிக் பாஸ் சீசன் 5 பைனலுக்கு சீசன்1 சீசன்2 சீசன் 3,சீசன் 4, போட்டியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப் பட்டது. லொஸ்லியா, ஓவியா உட்பட பல போட்டியாளர்கள் கலந்து கொள்கின்றனர். ஆனால் பிக் பாஸ் 4 டைட்டில் வின்னரான ஆரி மட்டும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிக அளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் நடிகர் ஆரி. மற்றைய போட்டியாளர்களை விட மக்களின் அதிக ஆதரவை பெற்ற ஆரி சுமார் 10 கோடிக்கு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் கடந்த சீசனில் வெற்றி பெற்றிருந்தார். ஒவ்வொரு வருடமும் கடந்த சீசன் வெற்றியாளரே வெற்றிக் கிண்ணத்தை பிக் பாஸ் வீட்டிற்குள் எடுத்துச் செல்வதுண்டு, இந்த சீசனில் அது நடக்கவில்லை,
இந்த சீசனில் கடந்த சீசன் வெற்றியாளரான ஆரிக்கு பிரபல தொலைக்காட்சி அழைப்பு விடுக்கவே இல்லையாம். இது குறித்து ஆரி தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில் ஒவ்வொரு சீசனிலும் போல் இந்த சீசனிலும் கடந்த சீசன் வெற்றியாளர் தான் வெற்றிக் கிண்ணத்தை எடுத்துச் செல்வார் என நினைத்தேன்.
இம்முறை வீட்டிற்குள் செல்லலாம், உங்கள் எல்லோரையும் சந்திக்கலாம், மீண்டும்மொரு முறை கமல் சாரை சந்திக்கலாம் என ஆசைப்பட்டேன், ஆனால் எனக்கு அழைப்பு கூட விடுக்கவில்லை, மனம் உடைந்து போனேன், உங்கள் எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.!
I know you guys were looking forward for me in the trophy hand over segment in this bb5 finale even I was excited to meet you guys and kamal sir again but unfortunately I wasn't invited for the show. @ikamalhaasan @vijaytelevision
— Aari Arujunan (@Aariarujunan) January 15, 2022