இந்த வாரம் நாமினேஷனில் வந்த 8 பேர்.!! இதில் வெளியேற்றப் படும் போட்டியாளர் இவர் தான்.!!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினம் சுரேஷ் சக்ரவர்த்தி அவர்கள் வெளியேற்றப் பட்டது அவரது ரசிகர்களுக்கு மிகப் பெரிய இழப்பாக இருந்தது. வீட்டிற்குள் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தவரை அனிதா, சனம், அதன் பின் அர்ச்சனா ஆகியோர் அடக்கி விட்டார்கள்.
இதனால் தான் நேற்றை தினம் சுரேஷ் சக்ரவர்த்தி வெளியேற்றப் பட்டார். இருப்பினும் சுரேஷ் விஜய் தொலைகாட்சியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மறுபடி வருவார் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்த நிலையில் இன்றைய தினம் நாமினேஷனில் வந்தவர்களின் பெயர் விபரங்கள் வெளியாகி உள்ளது.
அதில் பாலாஜி, ஷிவானி, அர்ச்சனா, சுசித்ரா, ஆஜித், கேப்ரியலா, அனிதா, ரம்யா பாண்டியன், சம்யுக்தா, ஆகியோர் வந்துள்ளனர். இதில் நிஷா, ரியோ,ஆரி, சனம், சோம் சேகர் ஆகிய ஐந்து பேர் மட்டுமே தப்பியுள்ளனர்.
அதாவது இந்த முறை ஆஜித் அல்லது சுசித்ராவை வெளியேற்ற போட்டியாளர்கள் திட்டம் போட்டுட்டாங்க என்று தான் கூற தோன்றுகிறது. இந்த முறையும் அதிக வாக்குகள் பாலாஜிக்கு கிடைக்கும். அதே போல் சிவானி ரசிகர்கள் ஷிவானியை காப்பாற்றி விடுவார்கள். கடைசியில் இருக்கப் போவது ஆஜித் அல்லது சுசி தான், பொறுத்திருந்து பார்க்கலாம்.!