” பிக் பாஸ் வீட்டில் கட்டாய படுத்தி இதனை செய்ய வைப்பார்கள் ” முதல் முதல் பிக் பாஸ் வீடு பற்றி அதிர்ச்சியான விடயத்தை கூறிய ஓவியா…!!
பிக் பாஸ் சீசன் 4 ஆகஸ்ட் மாத இறுதி அல்லது செப்டம்பர் மாதம் வர இருக்கிறது. யாரெல்லாம் கலந்துகொள்ள போகிறார்கள், யாரெல்லாம் தற்போது செலக்ட் ஆகி உள்ளார்கள் என்ற தகவலை தொலைக்காட்சியினர் ரகசியமாகவே வைத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 4 பற்றி சீசன் 1ல் கலந்துகொண்டு தற்கொலை முயற்சி செய்து நிகழ்ச்சியை விட்டு சென்ற ஓவியாவிடம் ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டுள்ளார். அதில் பிக் பாஸ் மீண்டும் சீசன் 4 வேண்டுமா வேண்டாமா? என கேட்டுள்ளார்.
அதற்கு தொலைகாட்சிக்கு தேவை மக்களும் விரும்பி பார்க்கிறார், அப்படியானால் அது அவர்கள் விருப்பம் என கூறினார். அடுத்த கேள்வியாக பிக் பாஸ் வீட்டிற்குள் எப்படியானவர்கள் போக வேண்டும் என நீங்கள் விரும்புவீர்கள் என கேட்டுள்ளார். ?
அதற்கு ஓவியா என்னை போன்றவர்கள் போகவே கூடாது. டி ஆர் பி க்காக எதுவும் செய்வார்கள். பைத்தியம் பிடிக்க வைத்து தற்கொலை முயற்சி செய்யவும் வைத்து விடுவார்கள். டி ஆர் பி தான் முக்கியம் அவர்களுக்கு யாருக்கு என்ன நடந்தாலும் கவலை இல்லை என கூறியுள்ளார், ஓவியா முதல் முறை பிக் பாஸ் பற்றி கூறிய விடயங்கள் ரசிகர்களை அதிர வைத்துள்ளது..!!