பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய தாமரைக்கு கிடைத்த விலை மதிப்பில்லாத பரிசு! வைரலாகும் புகைப்படம் இதோ!!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் அதிகம் எதிர்பார்க்கப் பட்டவர் தாமரைச் செல்வி. பைனல் வரை செல்வார்,வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப் பட்ட போதும் எதுவும் இல்லாமல் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதனால் ரசிகர்கள் போல் அவரது குடும்பத்தினரும் சோகத்தில் இருந்தனர்.
இதனை பார்த்த தாமரை யாரும் கவலைபட வேண்டாம், நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்ன தான் சொத்துகள் கொடுத்தாலும் என் மகனுக்கு ஈடாகாது, பிக் வீட்டில் இருந்து வெளியேறியது கவலை தான், ஆனால் வெளியே வந்ததும் உங்கள் அன்பையும் ஆதரவையும் பார்த்து வியந்து விட்டேன்.
எனக்கு இந்த அன்பும் ஆதரவும் போதுமானது. அத்துடன் இந்த 3 மாத பிரிவின் பின் என் மகன் என்னுடன் அதிக அளவு அன்பாக இருக்கிறான், இதைவிட வேறென்ன வேண்டும் ஒரு தாய்க்கு. எவ்வளவு பெரிய பரிசு கிடைத்தாலும் இது தான் எனக்கு விலை மதிப்பில்லாத பரிசு என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இந்த முத்தம் வாழ்வில் என்றும் மாற்ற முடியாத முத்தம் என குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த தாமரை ரசிகர்கள் ஆம் இது தான் விலை மதிப்பில்லாத முத்தம் என கொண்டாடுகின்றனர்.!