பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ராஜுவிற்கு வாக்களியுங்கள்.! வைரலாகும் பிரபல நடிகரின் பதிவு.!!
பிக் பாஸ் சீசன் 5 வெற்றியாளர் ராஜு தான் என ஓரளவுக்கு ரசிகர்களுக்கு தெரிய வந்தாலும் டைட்டில் கிடைக்கும் வரை யாருக்கும் தெரியாது. பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றதில் இருந்து யார் வம்பு தும்புக்கும் போகாத ராஜு காமெடி கலாட்டா என இருந்தார்.
சிலர் மிக்ஸர் என கிண்டல் செய்த போதும் அதனை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை, எப்போதும் சண்டை போட்டு கத்தி கூச்சலிடுவதை விட அமைதியாக இருக்கலாம் என பலர் நினைப்பதுண்டு. அப்படி அமைதியாக விளையாடி ரசிகர்கள் மனதில் நிலையான இடம் பிடித்தவர் தான் ராஜு.
இந்த நிகழ்ச்சியில் உள்ள போட்டியாளர்களில் அதிக ஆதரவு ராஜுவிற்கே உள்ளது. இந்த நிலையில் ராஜுக்காக பலர் வாக்கு கேட்டு வருகின்றனர். அதில் ஒருவர் தான் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்து வரும் மிர்ச்சி செந்தில். இந்த சீரியலில் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த ராஜு திடீரென காணாமல் போனதாக கதை அமைத்துள்ளனர்.
பிக் பாஸ் வீட்டில் இருந்து ராஜு வந்ததும் சீரியலில் ராஜு தொடர்ந்து நடிப்பர் என கூறப்படுகின்றது.இந்த சீரியலில் ஹீரோவாக நடிக்கும் மிர்ச்சி செந்தில் கத்தி என்கிற ராஜுக்கு வாக்கு அளிக்குமாறு ரசிகர்களிடம் கேட்டு போட்ட பதிவு தற்போது வைரலாகி வருகின்றது.!