பிக் பாஸ் வீட்டில் இருந்து பணப் பெட்டியுடன் சற்று முன் வெளியேறிய போட்டியாளர்.! மக்கள் மனம் கவர்ந்த இவரா வெளியேறினார் என்ற சோகத்தில் ரசிகர்கள்.!!
பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இன்றைய தினம் போட்டியாளர் பணத்துடன் வெளியேறி உள்ளார். 100 நாட்களை நிகழ்ச்சி கடந்துள்ள நிலையில் பைனலில் 6 பேர் இருக்கின்றனர். பொதுவாக 5 பேர் மட்டுமே பைனல் செல்வார்கள் ஆனால் இம்முறை 6 பேர் வந்தனர்.
அதில் ஒருவருக்கு பணத்தை பெற்று வெளியேறும் வாய்ப்பு வழங்கப் பட்டது. ஆரம்பத்தில் பாலா அல்லது ஆரி தான் செல்வார் என எதிர்பார்க்கப் பட்ட நிலையில் பின் ரம்யா பாண்டியன் வெளியேறுவார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் சற்றுமுன் பணப் பெட்டியுடன் கேப்ரியலா வெளியேறியுள்ளார்.
கேப்ரியலா பைனல் வருவாரா என்று தெரியாமல் போட்டியாளர்கள் இருக்க் தன்னால் முடிந்த அளவு போராடி இறுதி சுற்றுக்கு வந்தார் கேப்ரியலா. இறுதி சுற்றில் பைனலில் வெற்றிபெற முடியாது என்பதை கேப்ரியலா நன்றாக அறிந்திருந்த நிலையில் பிக் பாஸ் கோல்டன் வாய்ப்பு அறிவித்தவுடன் வீட்டில் இருந்து வெளியேற முடிவு எடுத்ததுடன் பணப் பெட்டியுடன் வெளியேறி உள்ளார்.
வீட்டிற்குள் வந்த போட்டியாளர்கள் ஆரிக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள் என கூறிக் கொண்டிருந்ததால் கேப்ரியலா இந்த முடிவை எடுத்துள்ளார்.!!