தற்கொலைக்கு முயற்சி செய்த நடிகை சுதா சந்திரன்..! ஷாக்கில் ரசிகர்கள்…!!
சுதா சந்திரன். தமிழ் தெலுங்கு, ஹிந்தி என பல திரைப்படங்களில் நடித்தவர். தற்போதும் சீரியல்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார். சுதா சந்திரன் வாழ்க்கையை போல் யாருடைய வாழ்க்கையும் அமைந்துவிட கூடாதென அவர் பல முறை கூறியுள்ளார்.
அண்மையில் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டிகொடுத்த சுதா சந்திரன் நான் மும்பையை பூர்வீகமாக கொண்டவள். ஆனால் சென்னை மிகவும் பிடிக்கும். அதே போல் பரதம் எனக்கு ரொம்ப பிடிக்கும். சின்ன வயதில் இருந்தே என் ஈர்ப்பு இது இரண்டின் மீதும் இருந்தது.
ஒரு முறையில் திருச்சி வழியாக பயணித்துக் கொண்டிருந்தோம் அந்த இரவைப் போல் இன்னுமொரு இரவு வேண்டாம் என கதறும் அளவிற்கு அந்த சம்பவம் அமைந்தது. கண்மூடி திறக்கும் நொடியில் விபத்து நிகழ்ந்தது. என் கண்களில் நடப்பது என்ன என தெரிகிறது ஆனால் கால் தூக்க முடியவில்லை வலி கை எல்லாம் இரத்தம்.
என் வாகனத்தை ஓட்டியவரை பார்க்கிறேன் என் மடியில் சிதறிய சதைகளாக கிடக்கிறார். என்னுடன் பயணித்த பெண் தலையில் உள்ளவை அனைத்தும் வெளியே வந்த நிலையில் ஆனால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. திருச்சி அரச மருத்துவமனையில் என்னை அனுமதித்தார்கள்.
கால்களில் எலும்புகள் நொறுங்கிவிட்டதாக வைத்தியர்கள் கூறினார்கள். இரவு என் வாழ்வின் அறுவெருப்பான இரவு, வாழ்க்கையை என்றால் என்ன என்று புரிந்துகொள்ள எனக்கு கொடுக்கப் பட்ட அரக்கத் தனமான இரவு அது. 2 வருடங்கள் எழுந்து நடக்க முடியவில்லை தற்கொலை செய்துகொள்ள நினைத்தேன்.
ஆனால் என் குடும்பத்தார் என்னை கவனித்தனர். இறைவனும் உதவுனார் இன்று எழுந்து நிக்கிறேன். ஆனாலும் எப்போதும் அந்த அசிங்கமான இரவை மட்டும் மறக்க மாட்டேன் என கூறியுள்ளார்.!