3 வயதில் மகளை பிரிந்த எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் மகன் எஸ் பி சரண்.! வைரலாகும் விடயம்!!
தனது மகளை 3 வயதிலேயே பிரிந்துவிட்டதாக பாடகர் எஸ் பி சரண் கூறி இருப்பது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல பாடகர் மறைந்த எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் மகனான சரண் ஸ்மிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
திருமணமாகி சில வருடங்கள் மட்டுமே வாழ்ந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக 2002ம் ஆண்டு பிரிந்தார்கள். இவர்கள். பிரியும் போது இவர்களின் பெண் குழந்தைக்கு மூன்று வயது. அதன் பின் எஸ்பி சரண் மூழ்கியிருந்தார். பின்னர் 2012 மீண்டும் அபர்ணா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்ட சரண் புது வாழ்க்கையை ஆரம்பித்திருந்தார்.
இந்த நிலையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அனு தனது தந்தைக்காக பாடல் ஒன்றை பாடியுள்ளார், அதனை பார்த்த சரண் எனது மகளை மூன்று வயதில் தான் பார்த்தேன் அவளது பிரிவு மிக கொடுமை, என கூறியுள்ளார். ரசிகர்கள் பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.!