மேடையில் வைத்து சேரனை அவமானப் படுத்திய கவின்..! தடுமாறிய சேரன்.. கை தட்டி சிரித்த பார்வையாளர்கள்..!
சாண்டி கவின் லொஸ்லியா மூவருக்கும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பினால் இன்று வெளியே செல்ல வேண்டுமென அடம்பிடித்த லொஸ்லியாவை பிக் பாஸ் சமாதானப் படுத்தும் போதே தெரிந்தது நிச்சயம் இந்த வாரம் லொஸ்லியாவை வீட்டிற்குள் வைத்து செய்யப் போகிறார் என்பது. லொஸ்லியா வீட்டில் இல்லாவிட்டால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கண்டண்ட் கிடையாது.
இது வரை தர்சனுக்கு ஆதரவு கொடுத்த லொஸ்லியாவிற்கு பச்சையாக திட்டுவேன் என தர்சன் கூற மன முடைந்தார். அது மட்டும் இன்றி இன்று லொஸ்லியாவை ரகசிய அறைக்கு வர சொன்ன போது சேரன் காப்பாற்றப் படுவார் லொஸ்லியா வெளியேற்றப் படுவார் என உறுதியாக இருந்த போட்டியாளர்கள் ஒருவர் கூட லொஸ்லியாவிடம் செல்லவில்லை. கவின் மட்டுமே சென்று பேசினார்.
சாண்டி, மற்றும் முகென் சிறிது நேரத்தில் லொஸ்லியாவிடம் சென்று பேச தர்சனின் முகத்தை பார்த்து விட்டு செரினும் லொஸ்லியாவிடம் சென்றார். அதே போல் லொஸ்லியா திரும்பி வந்த போதும் யாருமே சந்தோசப் படவில்லை. நாளைய நாமினேஷனில் கண்டிப்பாக அனைவரும் லொஸ்லியாவை நாமினேட் செய்வார்கள் என்பது உறுதி.
அத்துடன் இந்த வாரம் முழுவதும் லொஸ்லியா வைத்து செய்யப் படுவார் என்பது உறுதி. அத்துடன் இன்றைய நிகழ்ச்சியில் சேரனின் மூக்கை உடைப்பது போல் கவின் பேசியதற்கு அனைவரும் சிரித்தாலும் சேரனின் முகம் மாறியது. அதாவது”சேரன் மேடையில் நின்று கவினுக்கு அறிவுரை கூறினார்,
அதன் போது சாரி சார் நீங்கள் போகும் போது உங்களை நான் கண்டுகொள்ளவே இல்லை லொஸ்லியாவின் முகத்தை மட்டுமே பார்த்தேன் என்றார். இதனால் சேரனின் முகம் மாறினாலும் உடனடியாக சரி செய்து கொண்டு நீ இன்று மட்டுமா பார்க்கவில்லை 91 நாட்களும் நீ என்னை பார்க்கவில்லை என கூறி சமாளித்தார். நாளை வரை மிகுதிக்காக காத்திருப்போம்..!