இன்றைய ராசி பலன்! 23 .09.2019
புரட்சி நண்பர்களே அன்பான வணக்கம். இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.
23.09.2019 ரட்டாதி மாதம் 06 ஆம் நாள் திங்கட்கிழமை நாள் முழுவதும் சித்தாமிர்தமாகும். நவமி பின் பகல் 1.49 வரை திருவாதிரை முன் பகல் 7.51 வரையாகும். சுப நேரம் மதியம் 12.02 – 1.32 வரையாகும். எமகண்டம் காலை 10.32 – 12.02 வரையாகும். இராகுகாலம் காலை 7.32 – 9.02 வரையாகும். குளிகன் மதியம் 1.32 – 3.02 வரையாகும்.
மேஷ ராசி நேயர்களே: உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வு நடைபெறும். அதிகாரப் பதவியில்இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சொந்த-பந்தங்கள் தேடி வந்துப் பேசுவார்கள். அரசால் அனுகூலம்உண்டு. வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். புதிய வாகனம் வாங்குவீங்கள். குடும்பத்தினர் உங்கள்ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். இன்றைய நாள் நினைத்ததை முடிக்கும் நாளாகும்.
ரிஷப ராசி அன்பர்களே: தம்பதியினருக்கு இடையில் மனம் விட்டுப் பேசுவீர்கள். சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் வெற்றி அடையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். திடீர் வெளியூர் பயணம் ஏற்படும். வாகனம் செலுத்தும் போது அதிக கவனம் தேவை. பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும். இன்றைய நாள் தேவைகள் பூர்த்தியாகும் நாளாகும்.
மிதுன ராசி காரர்களே: உங்கள் ராசிக்குள் சந்திரன் இருப்பதால் கொஞ்சம் அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். சிலர் உதவுவதை போல் உபத்திரவம் தருவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுங்கள். பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். இன்றைய நாள் பொறுமைத் தேவைப்படும் நாளாகும்.
கடக ராசி நேயர்களே: உங்கள் வீட்டில் உள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீங்கள். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சித்து பேச வேண்டாம். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். நண்பர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் மறைமுகப் பிரச்னைகள் வரக் கூடும். தந்தையின் உடல் நலத்தில் நன்மை உண்டு. இன்றைய நாள் போராடி வெல்லும் நாளாகும்.
சிம்ம ராசி அன்பர்களே: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். யதார்த்தமாகப் பேசிக்கவர்வீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினையில் தீர்வு காணுவீங்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். உங்கள் பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ் கூடும். இன்றைய நாள் இன்பம் பெறும் நாளாகும்.
கன்னி ராசி காரர்களே: நீங்கள் நேர்மையாக தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். பழைய கடனை திரும்பி செலுத்துவீங்கள். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகு முறையால் இலாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். திருமண யோகம் ஏற்படும். புதிய வீடு வாங்குவீங்கள். இன்றைய நாள் புகழ், கௌரவம் கூடும் நாளாகும்.
துலாராசி உறவுகளே: பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உறவினர்கள் மதிப்பார்கள். புதிய சிந்தனைகள் தோன்றும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் மரியாதைக் கூடும். வாகனம் செலுத்தும் போது அதிக கவனம் தேவை. குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்று கொள்வர். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளவும். பெற்றோர்களின் அன்பும், ஆசியும் கிட்டும். இன்றைய நாள் உற்சாகமான நாளாகும்.
விருச்சிக ராசி நேயர்களே:. உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் நீடிப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். உங்கள் வாயை சிலர் கிளறி வேடிக்கைப் பார்ப்பார்கள். வியாபாரத்தில் இரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். தாய்வழி உறவினர்களால் நன்மை உண்டாகும். இன்றைய நாள் நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாளாகும்.
தனுசு ராசி அன்பர்களே: உங்கள் முன் கோபத்தை குறைத்து வாழ்வில் உயரும் வழியை யோசிப்பீங்கள். சகோதரர் வகையில் உதவிகள் கிடைக்கும். வாகனத்தை சரி செய்வீர்கள். புது வேலை அமையும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்களை ஆதரித்து பேசுவர். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். மனதில் நினைத்த காரியம் எளிதில் கைகூடும். இன்றைய நாள் தன்னம்பிக்கை துளிர்விடும் நாளாகும்.
மகர ராசி காரர்களே: உங்கள் வீட்டில் உள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். பு து பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். குடும்பத்தில் வரும் பிரச்னைகளை பேசி சரி செய்து கொள்ளவும். திருமணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். தம்பதியினருக்கு இடையில் பனிப் போர் வந்து நீங்கும். நண்பர்களிடம் சிறிய மனஸ்தாபம் ஏற்படும். இன்றைய நாள் மதிப்புக் கூடும் நாளாகும்.
கும்ப ராசி உறவுகளே: உங்கள் குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். குடும்பத்தில் முக்கிய நிகழ்ச்சி ஒன்று நடக்கும். கடன் வாங்குவது, கொடுப்பதில் மிகுந்த கவனம் தேவை. இன்றைய நாள் கனவு நனவாகும் நாளாகும்.
மீன ராசி நேயர்களே: உங்கள் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். பயணங்கள் திருப்திகரமாக அமையும். வீட்டை விரிவுப்படுத்துவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் இலாபம் ஏற்படும். புதிய வீடு வாங்குவீங்கள். திருமணப் பேச்சு வார்த்தை வெற்றி அடையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். இன்றைய நாள் பழைய நினைவுகளில் மூழ்கும் நாளாகும்.