அகில ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகும் சஜித்..!!
இலங்கை அரசாங்க நிறுவனங்களில் நடைபெற்ற ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் இன்று சஜித் பிரேமதாஸ மற்றும் அகில விராஜ் காரியவசம் ஆகியோர் ஆஜராகவுள்ளனர்.
இவர்களை விட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டீ.எம் சுவாமிநாதனும் இன்று ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகவுள்ளார். மேலும் இவர்கள் பாடசாலை புத்தகங்களை அச்சிடும் போது அமைச்சரின் புகைப்படத்தை அதில் உள்ளடக்கியதில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் இன்று ஆஜராகவுள்ளார்.
இலங்கை வீடமைப்பு அதிகார சபை அரசாங்கத்திற்கு எதிராக ஆட்களை சேர்த்துக் கொண்டமையின் ஊடாக ஏற்பட்ட மோசடி தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அமைச்சர் சஜிம் பிரேமதாஸ ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகவுள்ளார்.