அழுகிய நிலையில் மீட்கப் படும் சடலங்கள்.! ஆபத்தை நோக்கி நகரும் இலங்கை.!!
இலங்கை மிகவும் ஆபத்தான நிலைக்கு சென்றுகொண்டிருப்பதாக சுகாதார துறையினர் தெரிவித்து வருகின்ற போதும் மக்கள் கவனக் குறைவாக இருக்கின்றனர். உலகில் உள்ள அத்தனை கொரோனா திரிபுகளும் இலங்கையில் கண்டுபிடிக்கப் பட்டுள்ள நிலையில் வீடுகளில் மரணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, இன்றைய தினம் 86 வயது மூதாட்டி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப் பட்டது ஆபத்தை அருகில் என்பதை எச்சரித்துள்ளது.
வீடொன்றில் தனியாக வசித்து வந்த பெண்ணே இவ்வாறு மரணமடைந்துள்ளார், சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது குறித்த மூதாட்டி அரச பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார், இவர் தனது வீட்டில் இரண்டு ஆசிரியைகளுடன் வசித்து வந்துள்ளார், சில நாட்களுக்கு முன்பு ஆசிரியைகள் இருவரும் அவர்களின் வீட்டுற்கு சென்ற நிலையில் குறித்த பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
மூன்று நாட்கள் ஆகியும் வீட்டில் இவரது நடமாட்டம் இல்லாததால் அயலவர்கள் பொலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.வீட்டிற்கு வந்த பொலீஸார் கதவை உடைத்து பார்த்த போது குறித்த பெண் சடலாமாக கிடந்துள்ளார், இவர் கொரோனாவால் மரணமடைந்திருக்கலாம் என கூறப்படுகின்ற நிலையில் அவரது உடல் அழுகிய நிலையில் மீட்கப் பட்டுள்ளது, இலங்கையில் கொவிட் மரணங்கள் வேகமாக அதிகரித்து வருவதுடன் நேற்றைய தினம் மாத்திரம் 94 பேர் மரணமடைந்திருந்தனர் !