பிரசவத்தின் பின் படுத்த படுக்கையான பிரபல நடிகை..!
தாய்மை என்பது கடினமானது தான். ஆனால் அதன் பின்பு கிடைக்கும் சுகம் இனிமையானது. பெண்ணாக பிறந்துவிட்டால் நிச்சயம் தாய்மையின் வலியும் சுகமும் அனுபவிக்க வேண்டும் என்பார்கள். அதனை தான் அனுபவிப்பதாக பாலிவுட் பிரபல சீரியல் சாவி மிட்டல் பதிவிட்டுள்ளார்.
இவருக்கு முதல் குழந்தை பிறந்து சில வருடங்களின் பிறகு இரண்டாவது குழந்தையை சுமக்க தொடங்கினார். கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் இவருக்கு சில பாதிப்புகள் இருந்ததால் ஓய்வு தேவைபட்டது. ஆனால் வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டார் சாவி மிட்டல்.
தற்போது குழந்தை பிறந்து வைத்திய சாலையில் இருகின்றார். குழந்தை நலமுடன் பிறந்துள்ளது. ஆனால் நடிகை மிட்டலின் பாதம் மற்றும் கால்கள் அசைக்க முடியாமல் உள்ளதாம்.காது அடைப்பட்டு காது கேட்பது குறைவாக உள்ளதுடன் இடுப்பு வலியும் இருக்கிறதாம்.
அத்துடன் உடல் நிலையும் மோசமாக இருப்பதாக குறிப்பிட்ட அவர் பெட்டில் தொடர்ந்து வெட்டியாக இருக்க முடியாததால் வெப் சீரிஸ் வேலைகளை செய்கிறாராம். இத்தனை வலிகளையும் என் உயிரான குழந்தைக்காக தாங்கிக் கொள்வது மகிழ்ச்சி என கூறியுள்ளார்.!