கொலையை தற்கொலையாக மாற்றிய மருத்துவ அறிக்கை..! தொழிலதிபர் என்பதை காட்டிய சித்துவின் வருங்கால கணவர்.!!
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொல்லவில்லை, கொலை செய்யப் பட்டுள்ளார் என குடும்பத்தார் ரசிகர்கள் குற் றம் சாட்டிவரும் நிலையில் இன்று வெளியான பிரேத பரிசோதனை அறிக்கையில் சித்ரா தற்கொலை செய்துகொண்டார் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
சிறு வயதில் இருந்து வாழ்க்கையில் போராடி கொஞ்சம் கொஞ்சமாக வெற்றி பாதையை நோக்கி நகர்ந்த சித்ரா ஓரளவு வாழ்வில் செட்டிலாகி உள்ள நிலையில் அவரது மரணம் அனைவரையும் அதிர வைத்துள்ளது, சித்ராவுடன் பழகிய நண்பர்கள் அனைவரும் கூறும் ஒரே விடயம் சித்ரா தற்கொலை செய்துகொள்ள மாட்டாள்.
வாழ்கையில் எப்படி போராட வேண்டும் என்று எங்களுக்கு கற்று தந்த சித்து கண்டிப்பாக தற்கொலை செய்திருக்க மட்டாள் என்பது தான் சக தோழிகளின் கருத்து. இந்த நிலையில் இன்று வெளியான பிரேத பரிசோதனை அறிக்கையில் சித்ரா தற்கொலை செய்து கொண்டார் என குறிப்பிடப் பட்ட நிலையில் பொலீஸார் சித்ராவின் மரணம் தற்கொலை என்று அறிவித்துள்ளனர்.
இதனை பார்த்த பலரும் வழமை போல் இன்றும் பெட்டி கைமாறி விட்டது, இந்தியாவின் சட்டம் சாதாரண குடும்பத்தில் இருந்து மரணிப்பவர்களுக்கு எதிரானது தான். தொழிலதிபர் தனது பண பலத்தை காட்டிவிட்டார் என கூறி வருகின்றனர்.!!