முதலிரவில் இப்படி நடக்காவிட்டால் அது யாருடைய தவறு.? ஏன் இப்படி செய்கின்றீர்கள்? பாடகி சின்மயி கோபத்துடன் வெளியிட்ட வீடியோ.!!
முதலிரவில் கன்னித் தன்மையை நிரூபிக்க முடியாத பெண்கள் அனைவரும் தவறு செய்தவர்களா? என கேட்டு பாடகி சின்மயி கோபமாக வீடியோ வெளியிட்டுள்ளார். பெண்களுக்கு நடக்கும் பாலியல் வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் பாடகி சின்மயி கடந்த சில வருடங்களாக மீ2 மூலம் பல சர்ச்சைகளையும் அதற்கான தீர்வையும் ஏற்படுத்திக் கொடுத்து வருகிறார்.
வைரமுத்து தன்னை பாலியல் ரீதியாக சீண்டியது, படுக்கைக்கு அழைத்தது என்று சர்ச்சைகளை ஏற்படுத்தினார். ஆனால் அதற்கான ஆதரங்கள் இல்லாததால் அவை இன்னும் சர்ச்சையாகவே இருக்கின்றது. இந்த நிலையில் அண்மையில் வீடியோ ஒன்றை வெளியிட்ட சின்மயி பெண்கள் பற்றிய உங்கள் எண்ணங்கள் இன்றளவும் ஏன் இப்படி என்று தெரியவில்லை,
முதலிரவில் இரத்தம் வரவில்லை என்றால் அதற்கு பெண் என்ன செய்வாள்? இயற்கையை மாற்றவா போகின்றீர்கள், உங்கள் எண்ணங்களை மாற்றுங்கள், மாதவிடாய் காலத்தில் பெண்களை ஒதுக்கி வைப்பது போன்ற முட்டாள் தனமான செயல்கள் இன்றளவும் தொடர்கிறது, என சற்று ஆதங்கத்துடன் பேசியுள்ளார். இதற்கு பெண்கள் ஆதரவாக கருத்து கூறி வருகின்றனர்.!!