வைரமுத்து அவர்களின் கவுரவ டாக்டர் பட்டத்தை பறித்த பாடகி சின்மயி..! நடந்தது இது தானாம்..!!
தமிழ் சினிமாவில் இருந்த முக்கிய இருக்கும் அதே நேரம் சிறந்த கவிஞர்களில் ஒருவர் கவிப்பேரரசு வைரமுத்து. இவரது கவிதைகள், பாடல்களில் யாராலும் குறை கூறிவிட முடியாது. இரண்டு தலைமுறையினரை கடந்து மூன்றாவது தலைமுறையினரும் வைரமுத்துவின் கவிதைகளை ரசிக்க தொடங்கிவிட்டனர்.
இருப்பினும் அவர் மீதான சர்ச்சைகள் அதிகரித்துக் கொண்டிருகின்றது. ஆண்டாள் பற்றி ஏற்கனவே வைரமுத்து அவர்கள் கூறியிருந்த கருத்து பலரது வெறுப்பை சந்தித்ததுடன் சர்ச்சையை ஏற்படுத்தியது. தான் தவறாக சொல்லவில்லை என்றும் அதற்கான தன் பக்க நியாயத்தையும் வைரமுத்து அவர்கள் விளங்கப் படுத்தினார்.
அதனை தொடர்ந்து பாடகி சின்மயி அவர் மீது பாலியல் புகார் தெரிவித்தார். 15 வருடங்களுக்கு முன்பு பாலியல் தொந்தரவு செய்ததாகவும் ஆதாரம் இருப்பதாகவும் கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். ஆனால் ஆதாரம் இருந்தால் பொலீஸில் புகார் கொடுக்கும் படி கூறிய போது சின்மயி அதனை செய்யவில்லை.
இந்த நிலையில் தற்போது பிரபல தனியார் பல்கலைக்கழகம் வைரமுத்து அவர்களுக்கு டாக்டர் பட்டம் அறிவித்தது. இந்த கவுரவ டாக்டர் பட்டத்தை ராஜ்நாத் சிங் வழங்குவதாக இருந்தது. வைரமுத்துவிற்கு டாக்டர் பட்டம் வழங்கப் படப் போகும் செய்தி அறிந்த சின்மயி பாலியல் பலாத்காரம், பாலியல் துஷ்பிரயோகம், பாலியல் தொல்லை போன்றவற்றிக்கு டாக்டர் பட்டம் வழங்குவதாக இருந்தால் வைரமுத்துவிற்கு வழங்குங்கள் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் ராஜ்நாத் சிங் வைரமுத்துவிற்கு தன் கையால் டாக்டர் பட்டர் வழங்க முடியாது என தெரிவித்தார். இதனை தொடர்ந்து பல்கலைக்கழகம் வேறு ஒருவரை நியமித்திருந்த நிலையில் வேறு ஒருவரின் கையால் விருது வாங்க முடியாது என வைரமுத்து தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சின்மயியால் தான் ராஜ்நாத் சிங் விருது வழங்குவதை தவிர்த்தார் என செய்திகள் வெளியாகி உள்ளது..!
The Defence Minister of India is conferring an honorary degree to Kavignar Vairamuthy named by 9 women so far for having molested them.
Just reiterating – outing KNOWN molesters does NO damage to them. Instead I got banned from working.
1/3 pic.twitter.com/AbAExIAwbA
— Chinmayi Sripaada (@Chinmayi) December 26, 2019