” கொரோனா வைரஸால் பாதிக்கப் படுவதை விட இது மோசமானதாகும் .. அரசு உடனடியாக கவனத்தில் கொள்ளுங்கள் ” நடிகை ரித்விகா ஆவேச பேச்சு…!!
கொரொனா வைரஸ் எமது நாடுகளில் பரவாமல் இருக்க அரசின் செயற்பாடுகளுக்கு கட்டாயம் நாம் ஒத்துழைப்பு வழங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். காரணம் கொரோனாவின் தாக்கமானது வேகமாக இது வரை 192 நாடுகளில் பரவி உள்ளது. சுமார் 3லட்சத்து 80 ஆயிரம் பேர் இது வரை கொரோனா தொற்றினால் பாதிக்கப் பட்டுள்ள அதே வேளை 15304 பேர் இது வரை மரணமடைந்துள்ளனர்.
இதில் இருந்து மீழ்வதாயின் கட்டாயம் வெளியில் செல்வதை நிறுத்திவிட்டு வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஆனால் அன்றாடம் கூலி வேலை செய்து தங்கள் குடும்பத்தை பார்த்தவர்களுக்கு இது கடினமான ஒன்றாகும். இந்த நிலையில் சில கடைகளில் அரசால் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு பொருட்களை விற்க ஆரம்பித்துள்ளனர்.
இப்படி சம்பாதிக்கும் பணம் என்பது கொரோனா தாக்கத்தால் பாதிக்கப் படுவதை விட மிக மோசமான செயலாகும். இந்த விடயம் தொடர்பாக பேசியுள்ள நடிகை ரித்விகா உங்களிடம் அதிகம் இருந்தால் அருகில் இருப்பவர்களுக்கும் கொடுங்கள்.
அதே நேரம் அன்றாடம் உணவுக்கு கஷ்டம் படும் அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்காதீர்கள் என குறிப்பிட்டதுடன் மக்கள் தவிக்கும் நேரத்தில் இது போல் செய்யும் மிருகங்களை அரசு இணங்கண்டு சரியான தண்டனை கொடுக்க வேண்டும். முடிந்தால் தூக்கு தண்டனை கொடுங்கள் என் ஆவேசமாக பேசியது தற்போது வைரலாகி வருகிறது…!!