விவாகரத்து குறித்து முதல் முதல் மேடையில் பேசி கண்கலங்கிய டிடி.! டிவியின் வாழ்வில் இத்தனை சோகங்களா.!?
சினிமா பிரபலங்கள் சர்ச்சையில் மாட்டிக் கொள்வது புதிய விடயமல்ல. அவர்கள் எது செய்தாலும் அது சர்ச்சையாகவே முடியும். இதில் மக்களுக்கு ரொம்ப பிடித்த தொகுப்பாளியான டிடியும் மாட்டிக் கொண்டார். சுசி லீக்கிஸின் பின் டிடியின் வாழ்க்கை மாறிப்போனது.
ஏராளமான கனவுகளுடன் திருமணத்தில் இணைந்த டிடி சில 1 வருடத்திலேயே கணவரை பிரிந்தார். தற்போது சினிமா, தொலைகாட்சி என பிஸியாக இருக்கிறார். அண்மையில் சிறந்த தொகுப்பாளினிக்கான விருது டிடிக்கு கிடைத்தது. விருது பெற்றுக் கொண்ட டிடி முதல் முறை தனது வாழ்க்கை பற்றி பேசியுள்ளார்.
” உலகில் எதுவும் நிரந்தரமில்லாத போது வாழ்க்கையில் மட்டும் எப்படி நிரந்தரமாக போகிறது..? சில உறவுகள் விரும்பி வருகின்றனர், பின் வெறுத்து விலகி போய்விடுகின்றனர். எனக்கும் அப்பிடி தான். கூடவே கைபிடித்து நடப்பார்கள் என நினைத்து விட்டுப் போன பின் உடைந்து போனேன்.
உங்களுக்கு ஒன்று சொல்கிறேன் உறவுகளை மேக் அப் போல் நினைத்துக் கொள்ளுங்கள். வியர்வை வந்தால் கூட கரைந்து விடும். அதன் பின் புதிய மேக்கப்பில் புதிதாக பிறந்து விடுங்கள். வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்..!!