இறந்தவர்களின் பொருட்கள் மட்டும் ஜாதகத்தை வீட்டில் வைக்கலாமா.!? இதனால் ஏற்படும் விபரீதங்கள் என்ன.!? இதோ உங்களுக்காக..!!
வீட்டில் இறந்தவர்கள் பொருட்களை வீட்டில் வைக்கலாமா கூடாதா? பெரும்பாலும் இது ஒரு கேள்விக்குறியாகவே இருக்கின்றது. இது பற்றி பலரும் அறியாத சில விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைபடுகின்றோம். கண்டிப்பாக இந்த தகவல் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். முதலில் இறந்தவரின் ஜாதகம் பற்றி பார்க்கலாம்.
பெரும்பாலும் இறந்தவரின் ஜாதகத்தை வீட்டில் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு இயற்கை முறையில் மரணமடைந்த 45 வயதிற்கு மேட்பட்டவர் ஜாதகத்தை மட்டுமே வீட்டில் வைத்திருக்க வேண்டும். அகால மரணமடைந்தவர்கள் அதாவது விபத்து,அல்லது அதிக ஆசைகளுடன் துடிதுடித்து இறந்தவர்கள் போன்றோரின் ஜாதகங்களை வீட்டில் வைக்கவே வைக்காதீர்கள்.
ஆறு அல்லது ஓடும் நீரில் ஜாதகத்தை போட்டு விடுங்கள். இதனை வீட்டில் வைப்பது தவறான விடயமாகும். அதே போல் இறந்தவர்களின் உடைகளை வீட்டில் வைக்கலாமா என்ற கேள்வி உண்டு. அதுவும் அப்படி தான் இரத்த கறை இருந்தால் வீட்டில் வைக்க வேண்டாம்.குறிப்பாக இறந்தவர்களின் உள்ளாடைகளை வீட்டில் வைக்க வேண்டாம். இது பற்றி மேலதிக விபரங்கள் இந்த வீடியோவில் உள்ளது.
இறந்தவர் அன்புக்குறியவர் என்பதால் அவரது ஜாதகம் துணிகளை நீங்கள் சேர்த்து வைப்பீர்கள் கண்டிப்பாக தூக்கிப் போடுவது கஷ்டம் தான். ஆனால் அவரின் ஆன்மாவிற்கு அமைதி தேவை என்பது போல் உங்களுக்கும் ஆபத்து அதிகம் என்பதை உணர்ந்து செயற்படுங்கள்..!