குக்கூ குக்கூ பாடல் நாயகி, பாடகி “தீ” யின் தந்தை பற்றிய செய்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்த தாயார்.! சோகத்தில் ரசிகர்கள்.!!
” குக்கூ குக்கூ” பாடலை பாடிய தீ என்கிற தீட்ஷீதா பற்றிய பல கேள்விகளுக்கு அவரது தாயாரான மீனாட்சி ஐயர் பதில் அளித்துள்ளார். தமிழில் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தவர் தீ. இவரது குரலில் யாரிடமும் இல்லாத ஒரு ஈர்ப்பு இருப்பதாக இசையமைப்பாளர்கள் பாராட்டுவதுண்டு,உசுரு நரம்புல, ஏய் சண்டைகாரா, காட்டுப் பயலே, ரகிட ரகிட உட்பட பல பாடல்கள் “தீ”யின் திறமையின் வெளிப்பாடாக சூப்பர் ஹிட் அடித்தது.
தீ அண்மையில் பாடிய கூக்கூ கூக்கூ பாடல் யூடியூப் சாதனை செய்தது, இந்த பாடல் வெளியான பின்பு தான் தீ பற்றி ரசிகர்கள் தேட ஆரம்பித்தனர். ஆரம்பத்தில் இவர் சந்தோஷ் நாராயணன் அவர்களின் மகள் என கூறப்பட்டது, ஆனால் இல்லை என்றும் தீயின் பெயருக்கு பின்னால் வெங்கடேசன் என்ற பெயர் இணைக்கப் பட்டிருந்ததால் அவரது தந்தை யார் ஏன் தாய் அவரை பிரிந்தார் என்ற கேள்விகள் எழுந்தது,
இதற்கு தீ அவர்களின் தாயார் மீனாட்சி, நாங்கள் இலங்கையை பூர்வீகமாக கொண்டவர்கள், தற்போது வெளி நாட்டில் வசித்து வருகின்றோம். எனது கணவர் யார், தீயின் தந்தை யார் என்ற கேள்வியை பலர் கேட்டுள்ளீர்கள், தீயின் தந்தையும் நானும் திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தோம், அவர் புது வாழ்க்கை அமைத்துக் கொண்டார், நானும் இரண்டாவதாக சந்தோஷ் அவர்களை திருமணம் செய்து மகிழ்ச்சியாக இருக்கின்றேன்.
எனது மகளான தீ அவரது தந்தையாக சந்தோஷை ஏற்றுக்கொண்டார். இன்று தீயின் பல வெற்றிக்கு காரணமாக இருப்பது அவரது தந்தை சந்தோஷ் தான். நாம் எமது குடும்பம் என மகிழ்ச்சியாக இருக்கின்றோம், தயவு செய்து சர்ச்சைகளை ஏற்படுத்தாதீர்கள் என கூறியுள்ளார்.
தீயின் தந்தையான வெங்கடேஷன் அவர்கள் இலங்கையை சேர்ந்தவர் தான். இனி என்னிடமோ தீ இடமோ இது பற்றி கேட்காதீர்கள் என கூறியுள்ளார். இதனை பார்த்த பலர் ஒருவர் புகழ் பெற்றால் ஏன் அவரது நிஜ வாழ்க்கையை பற்றி பேச வேண்டும், இதனை நிறுத்திக் கொள்ளுங்கள் என கூறி வருகின்றனர்.!