குக் வித் கோமாளி புகழ் ரித்திகா மற்றும் பாலா இருவரும் நிஜத்தில் காதலிக்கின்றார்களா.? இதோ இருவரும் கூறிய ஒரே பதில்.!!
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ரித்திகா மற்றும் KPY பாலா காதலிப்பதாக செய்திகள் வெளியான நிலையில் நாங்கள் நல்ல நண்பர்கள் மட்டும் தான் என பாலா மற்றும் ரித்திகா கூறி இருப்பது அவர்களின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பாக்கியலக்ஷ்மி சீரியலில் சிறு வயதிலேயே கணவரை இழந்துவிட்டு மாமி மாமாவோடு வாழும் பெண்ணாக நடிக்கிறார் ரித்திகா. இதில் ரித்திகாவை ஒரு தலையாக காதலிக்கும் அவரின் நண்பராக நடிக்கிறார் எழில்,இவர்களின் கதாபாத்திரம் அதிகம் பேசப்படாலும் ரித்திகாவிற்கு புகழ் வாங்கி கொடுத்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.
இதில் பாலா விழுந்து விழுந்து ரித்திகாவை காதலிப்பது போல் நடிப்பார். நிகழ்ச்சி நிறைவடைந்த பின்பும் கூட இருவரையும் திரையில் பார்க்கும் போது மிகவும் அழகாக இருக்கிறது, இவர்கள் நிஜ காதலர்கள் போல் பேசிக்கொள்வதால் இவர்கள் காதலிப்பதாகவே அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
இது பற்றி ரித்திகா மற்றும் பாலாவிடம் கேட்ட போது இருவருமே உங்கள் சந்தோசத்திற்காக காமெடி செய்கிறோம் அவ்வளவு தான், நாம் காதலிக்கவில்லை, இருவரும் நல்ல நண்பர்கள் என தெரிவித்துள்ளனர். இதனை பார்த்த ரசிகர்கள் நீங்கள் வாழ்க்கையில் நினைத்தால் நன்றாக இருக்கும் என கூறி வருகின்றனர்.!