பிக் பாஸ் வீட்டில் இருந்து நாளை மறுதினம் வெளியேற்றப்பட போகும் போட்டியாளர் இவர் தான்.! அர்ச்சனா எவிக்ஷனில் இருந்து தப்பி விட்டார்.!!
பிக் பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாக சண்டை சண்டை என பார்த்து ரசிகர்களும் கடுப்பில் இருக்கும் நிலையில் இன்றைய தினம் Fun டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப் படுகிறது. இதனால் ப்ரோமோக்கள் கொஞ்சம் மகிழ்ச்சியாக இருக்கிறது.
ஆனால் இந்த வார இறுதியில் அத்தனை மகிழ்ச்சி இருக்காது என கூறப்படுகின்றது. பிக் பாஸில் கடந்த சில நாட்களாக அர்ச்சனாவின் குரல் அனைவரையும் மிரட்டியதால் அர்ச்சனாவை வெளியேற்ற ரசிகர்கள் விரும்பினார்கள்.
ஆனால் அர்ச்சனாவிற்கு வாக்குகள் குறையவில்லை, அவர் நான்காவது இடத்தில் இருக்கிறார். ஆரி அதிக வாக்குகளுடனும், பாலாஜி இரண்டாவது இடத்திலும், அனிதா மூன்றாவது இடத்திலும், அர்ச்சனா நான்காவது இடத்திலும், சனம் ஐந்தாவது இடத்திலும், 6 வது மற்றும் ஏலாவது இடத்தில் சோம் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகிய இருவரும் இருக்கின்றனர்.
இதில் வாக்குகள் மிகவும் குறைந்த நிலையில் சுரேஷ் இருக்கிறார். ஆனால் சுரேஷால் அடிக்கடி ஏதாவது கண்டெண்ட் கிடைக்கிறது, ஆனால் சோம் சேகரால் கண்டெண்ட் கிடைப்பதே இல்லை. அதனால் இம்முறை சோம் சேகர் வெளியேற்றப் படலாம் என கூறப்படுகின்றது.
அர்ச்சனாவை வெளியேற்ற வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு தொப்பி தான். இம்முறை சோம் அல்லது சுரேஷ் சக்ரவர்த்தி இருவரில் ஒருவர் கண்டிப்பாக வெளியேறுவார்கள் என கூறப்படுகின்றது.!!/