பணத்தை கொட்டிக் கொடுத்து திருமணம் செய்து வைத்த மகளை சடலமாக கொடுத்த மருமகன்.! கணவர் மற்றும் மாமியார் அப்பாவி பெண்ணுக்கு செய்த கொடூரம்!!
கார், 45 சவரண் தங்கம் என கொடுத்து திருமணம் செய்து வைத்த தங்கள் மகள் சடலமாக திரும்பி வந்ததை பார்த்த பெற்றோர் கதறி அழுத சம்பவம் தமிழக மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தில் கடலூரில் வசித்து வந்தவர் சுசிதா கிருபாலினி. கல்லூரி படிப்பை முடித்த சுசிதாவிற்கு பெற்றோர் சந்தோஷ் குமார் என்ற 28 வயது இளைஞரை திருமண நிச்சயம் செய்ததுடன், 30.08.2020 அன்று திருமணம் செய்து வைத்தனர்.
திருமணத்தின் போது தங்கம் 45 சவரண்,கார், மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்கள், வெள்ளி என மாப்பிள்ளை வீட்டார் கேட்ட அனைத்தையும் கொடுத்தனர். திருமணம் முடித்து சில நாட்கள் மட்டுமே மகிழ்ச்சியாக வாழ்ந்த சுசிதா அதன் பின் தினமும் மாமியார் மற்றும் கணவரின் கொடுமைக்கு முகம் கொடுத்துள்ளார்.
கொஞ்சம் கொஞ்சமாக சுசிதாவின் நகைகளை கணவர் சந்தோஷ்குமார் மற்றும் மாமியார் இந்திரா வாங்கிக் கொண்டதுடன் வீட்டில் போய் வரதட்சணை கேட்கும் படி கூறியுள்ளனர். வீட்டை வங்கியில் வைத்து கணவருக்கு பெற்றோர் கார் வாங்கி கொடுத்த நிலையில் மீண்டும் வரதட்சணை கேட்க முடியாது என கூறியுள்ளார். இதனால் அடித்து துன்புறுத்தியதுடன் நடத்தையை தவறாக சித்தரிப்பேன் என மிரட்டியுள்ளார்.
இதனால் மனமுடைந்த சுசிதா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்..நேற்று காலை சுசிதாவின் தந்தை ஆறுமுகத்திற்கு கால் செய்த சந்தோஷ் குமார் உங்கள் மகள் தற்கொலை செய்துகொண்டாள், என கூறியுள்ளார். உடனடியாக பொலீஸாருக்கு அறிவித்த ஆறுமுகம் மகள் வீட்டிற்கு வந்த போது சடலம் மட்டுமே கிடைத்துள்ளது.
சம்பவ இடத்திற்கு வந்த பொலீஸார் உடலை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளனர். இதனை தொடர்ந்து சுசிதாவின் தற்கொலை கடிதம் மற்றும் மெசேஜ்களையும், சுசிதாவின் தந்தை கொடுத்த புகாரையும் வைத்து சந்தோஷ்குமார் மற்றும் இந்திரா ஆகியோரை கைது செய்துள்ளனர்.