“முதுகில் ஏற்பட்ட மோசமான வலி” உடனடியாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி.! காரணம் இது தானாம்.!!
நடிகையும் செய்தி வாசிப்பாளருமான பாதிமா பாபு அவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கையை ஆரம்பித்த பாதிமா பாபு பின்னர் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்திருந்தார். ஏற்கனவே சில சர்ச்சைகளில் சிக்கிய பாத்திமா பாபு அதில் இருந்து மீண்டு தனது வாழ்க்கையை அழகாக அமைத்துக் கொண்டார்.
நீண்ட நட்களுக்கு பின் பிக் பாஸ் சீசன் 4ல் கலந்துகொண்டு முதல் போட்டியாளராக வெளியேற்றப் பட்டார். வீட்டிற்குள் இருந்த வரை அனைவரின் விருப்பத்தையும் பெற்றிருந்த பாதிமா பாபு வெளியேறி சில வருடங்களின் பின்பும் நட்பை தொடர்கிறார். இந்த நிலையில் திடீரென பாதிமா பாபு வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டதாக செய்திகள் வெளியானது.
இது தொடர்பாக பாதிமா பாபுவிடம் தொடர்பு கொண்டு பேசிய போது “நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் வீட்டிற்கு சென்றேன். திடீரென நடு முதுகு வலி ஏற்பட்டது. ஒரு பக்கமாகவும் வலி தாங்க முடியவில்லை, உடனடியாக வைத்தியசாலை சென்ற போது சிறுநீரக பிரச்சனை என்றும் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றார்கள்.
அவசர அவசரமாக சிகிச்சையை முடித்துக் கொண்டேன். தற்போது ஓரளவு உடல் ஓரளவு குணமாகி உள்ளது. நான் ரசிகர்களுக்கு சொல்ல ஆசைப்படுவது இது தான். நன்றாக தண்ணீர் குடியுங்கள் அதே போல் கழிவறை செல்ல வேண்டி வரும் போது உடனடியாக செல்லுங்கள் அது தான் சரியான தீர்வு.!