நயன்தாராவை விக்னேஷ் சிவன் திருமணம் செய்யாமல் இருப்பதற்கு காரணம் இது தானாம்! விக்னேஷ் சிவனே வெளியிட்ட பதிவு..!!
தமிழ் சினிமா ரசிகர்களின் கேலி கிண்டலுக்கு ஆளானாலும் காதல் பறவைகளாக சுற்றி வந்துகொண்டிருப்பவர்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் ஷிவன். இவர்கள் காதலிக்க ஆரம்பித்து சில மாதங்களில் தொடங்கிய நயன் சிவன் பிரிந்துவிட்டார்கள் என்ற வதந்தி இப்போது வரை சென்று கொண்டிருந்தாலும் நயனும் சிவனும் பிரியும் எண்ணம் துளியும் இன்றி சென்றுகொண்டிருக்கின்றனர்.
அண்மையில் பிரிந்து விட்டதாக கூறப்பட்டதற்கு பதில் அளிக்கும் விதமாக சண்டே ஸ்பெஷல் என கூறி மிக நெருக்கமான புகைப்படத்தை பதிவிட்டார். இதனை பார்த்த ரசிகர் ஒருவர் நெருக்கமாக புகைப்படம் வெளியிடுகின்றீர்கள், ஆனால் திருமணம் செய்யாமல் இருக்கின்றீர்கள் எப்போது திருமணம் செய்யப் போகின்றீர்கள் என கேட்டுள்ளார்.
இதற்கு பதில் அளித்த விக்னேஷ் சிவன் கல்யாணத்திற்கு பணம் தேவைப்படுகின்றது, அது தான் சேமிக்கிறோம், கொரோனா முடிந்ததும் திருமணம் செய்வோம் என கூறியுள்ளார். இதற்கு என்ன நயனிடம் பணம் இல்லையா என கிண்டல் செய்து வருகின்றனர்!!