பிக் பாஸ் வீட்டில் முதல் நாளே ஆரம்பித்த சண்டை..! ஷிவானி இப்படியானவரா.?
பிக் பாஸ் சீசன் 4 நேற்றைய தினம் ஆரம்பமானது, வழமை போல் இல்லாமல் போட்டியாளர்கள் தவிர்த்து பார்வையாளர்கள் அனைவரும் வீடியோ கால் மூலமே கலந்துகொண்டனர். கொரோனா வைரஸ் பரவுதலை தடுப்பதற்காகவும் பாதுகாப்பாக நிகழ்ச்சியை நடத்துவதற்காகவும் இந்த ஏற்பாடு செய்யப் பட்டதாக கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.
இம்முறை விஜய் தொலைகாட்சி பிரபலங்கள் பலர் கலந்துகொண்டுள்ள போதும் அடையாளம் தெரியாத சில முகங்களும் கலந்து கொண்டுள்ளனர். பாலாஜி முருகதாஸ், சோம் சேகர், என பெரிதாக பேசப்படாத சிலரும் உள்ளனர். இம்முறை சிறுவர்களாக நாம் பார்த்த கேப்ரியலா, ஆஜித், கலந்துகொண்டுள்ளதுடன் வயதில் குறைந்த போட்டியாளரான ஷிவானி நாராயணனும் கலந்து கொண்டுள்ளார்.
நேற்றைய முதல் நாளிலேயே ஒரு சிலரை எம்மால் கணக்கிடக் கூடியதாக இருந்தது, ஷிவானி அமைதியாக இருந்தார், ரம்யா பண்டியனும் வழமை போலவே இருந்தார். சனம் ஷெட்டி ஓவியா அல்லது லொஸ்லியா ஆக முயற்சி செய்கிறார் என்பது தெளிவானது. அனிதா சம்பத் ஓவர் ஆக்டிங் செய்கிறார். கேப்ரியலா பெரியவராக தன்னை காட்டிக் கொள்ள முயற்சி செய்கிறார்.
பாலாஜி கெத்து காட்டுகிறார், சோம் ப்ளே போயாக இருப்பார், இதில் சுரேஷ் மற்றும் அறந்தாங்கி நிஷா இடையே இன்று அல்லது நாளை மிகப்பெரிய சண்டை வெடிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. நிஷா எப்போதும் யாரையாவது கலாய்த்து தள்ளும் கதாபாத்திரம், ஆனால் சுரேஷ் தான் மட்டுமே மற்றவர்களின் கண்களுக்கு தெரிய வேண்டும் என நினைப்பவர்.
முதல் நாளிலேயே நிஷா பேசியது சுரேஷுக்கு பிடிக்கவில்லை அதனால் நிஷாவை திட்ட ஆரம்பிக்க ரியோ அதனை நிறுத்திவிட்டார். முதல் நாளிலேயே இப்படி என்றால் இனி வரும் நாட்கள் மிக மோசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்..!