இன்றைய ராசி பலன் – 05.10.2020
இன்றைய பஞ்சாங்கம், 05-10-2020, புரட்டாசி 19, திங்கட்கிழமை, திரிதியை திதி பகல் 10.02 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. பரணி நட்சத்திரம் பகல் 02.56 வரை பின்பு கிருத்திகை. சித்தயோகம் பகல் 02.56 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சங்கடஹர சதுர்த்தி – கிருத்திகை. விநாயகர் – முருக வழிபாடு நல்லது. இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
மேஷ ராசி நேயர்களே:உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். குடும்பத்தில் உறவினர் களால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது.மற்றவரிடம் உங்களை ஒப்பிட்டு கொண்டிருக்க வேண்டாம். பொறுமையைக் கடைப்பிடிக்கவும். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்று கொள்வது நல்லது. கணவன் – மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும்.குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும்.
ரிஷப ராசி அன்பர்களே: திடீர் பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள். போதுமான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள்.சகோதர வகையில் மனத்தாங்கல் வந்து நீங்கும். தேவையற்ற பிரச்சினைகளால் அமைதி குறையும்.நேரத்துக்குச் சாப்பிடமுடியாத படி ஒன்று மாற்றி ஒன்று ஏதேனும் வேலை இருந்தபடியிருக்கும்.உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளை கள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
மிதுன ராசி காரர்களே: பழைய சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப்பார்.விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். தந்தைவழி உறவினர்களால் காரிய அனுகூலமாகும்.நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக் கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும்.உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும்.
கடக ராசி நேயர்களே:உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். காரியங்கள் அனுகூலமாக முடியும். உறவி னரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.குடும்பத்தில் கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை கூடும்.
சிம்ம ராசி அன்பர்களே:வீட்டில் பணிச்சுமை குறையும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள்.வெளியூர் பயணங்களால் அனுகூலப்பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிற்பகலுக்குமேல் தொடங்கும் முயற்சி சாதகமாக முடியும். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள்.மாலையில் பிள்ளைகளுடன் கலந்து பேசி முக்கிய முடிவு ஒன்று எடுப்பீர்கள்.எந்த செயலிலும் புது உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள்.
கன்னி ராசி காரர்களே:ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். மனதில் இனம் தெரியாத குழப்பங்கள் ஏற்பட்டு விலகும்.உத்தியோகத்தில் பிறரின் குறைகளை சுட்டிக்காட்ட வேண்டாம். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும்.மன நிம்மதி குறையும். உறவினர்களால் ஓரளவு அனுகூலம் ஏற்பட்டாலும், அவர்களால் பிரச்னைகளும் ஏற்படக்கூடும். வெளியில் செல்ல நேரிட்டால் நன்றாக திட்டமிட்டுக்கொண்டு கவனமாக செல்ல வும்.
துலாராசி உறவுகளே:சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். தேவையான பணம் கையில் இருந்தாலும், தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். புனித ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும். கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும்.பிள்ளைகளால் பெருமை உண்டாகும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள்.
விருச்சிக ராசி நேயர்களே:குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.குடும்பத்தி னரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.பயணங்கள் சிறப்பாக அமையும். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். பிற்பகலுக்கு மேல் மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும்.மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.
தனுசு ராசி அன்பர்களே:கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும்.அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் லாபம் பாதிப்படையாது விற்பனை யும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.
மகர ராசி காரர்களே:சகோதர வகையில் செலவுகள் ஏற்படும். பிள்ளைகளால் தேவையற்ற பிரச்சினைகள் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி உண்டாகும். மாலையில் பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். எதிர்பார்த்த தொகை வராவிட்டாலும் எதிர்பாராத வகையில் பணம் வரும்.சுபநிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள்.
கும்ப ராசி உறவுகளே:குடும்பத்தில் உற்றார் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படுவீர்கள். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறி, உங்கள் அறிவுரைப்படி செயல்படுவார்கள்.வீட்டை அழகுபடுத்துவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் கூடும்.
மீன ராசி நேயர்களே:
எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வாழ்க்கைத்துணை நீங்கள் கேட்டதை மகிழ்ச்சியுடன் வாங்கித் தருவார்.திருமண முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படும். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். சகோதரர்கள் உதவி கேட்டு வரு வார்கள். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும்.புதிய முயற்சிகளில் சிறு தாமதத்திற்குப் பிறகு அனுகூலப்பலன் உண்டாகும்.