பிரான்ஸ் பொலீஸாரினால் பாடகி திவ்யாவிற்கு நேர்ந்த கொடுமை..! திவ்யா கண்ணீருடன் பகிர்ந்துள்ள விடயம்..!!
விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பாடகி திவ்யா. இந்த நிகழ்ச்சியின் பின் திரைப்படங்களில் பாட வாய்ப்பு கிடைத்ததை தொடர்ந்து பாடி வருகின்றார். இவர் திஷி தினகரன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் கணவருடன் பிரான்ஸ் சென்று அங்கு அவருக்கு நடந்த மிக மோசமான சம்பவங்களை தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கணவருடன் பெங்களூரில் இருந்து பிரான்ஸின் தலை நகர் பாரிஸ் வந்தடைந்தோம். எங்கள் வீட்டிற்கு இரயிலில் செல்ல வேண்டும் அதற்காக இரயில் நிலையம் சென்றோம். ஆனால் எமது இடத்திற்கு செல்லும் இரயில் வர 4 மணி நேரம் ஆகும் என்றார்கள். அதனால் எங்களிடம் இருந்த நான்கு பெட்டிகளை வைக்க லாக்கர் ரூம் தேடினோம்.
இல்லை அதனால் பெட்டிகளுடன் என்னை இருக்க சொல்லிவிட்டு எனது கணவர் லாக்கர் ரூம் தேடிச் சென்றார். பெட்டிகளுடன் காத்திருந்த என்னிடம் நபர் ஒருவர் வந்து எனக்கு தெரியாத இடம் ஒன்றின் பெயரை கூறி அங்கு எந்த இரயிலில் செல்ல வேண்டும் என கேட்டார். எனக்கு தெரியாது என்றேன். ஆனால் அவரோ விடுவதாக இல்லை. எனக்கு ஆங்கிலம் தெரியுமா.?
என கேட்டதுடன் இடம் தெரியாமல் தவிப்பதாக தெரிவித்தார். நானும் பாவம் பார்த்தேன் அதனால் இரயில் துறையினருடன் கேட்கும் படி கூறி அனுப்பினேன். அதன் பின் திரும்பி என் பெட்டிகளை பார்த்த போது முக்கிய பொருட்களான என் கணவரின் ஆவணங்கள் அடங்கிய லாப் டாப், ஹைபேட், எங்கள் பாஸ்போர்ட், மொபைல், பணம் பர்ஸ், உட்பட அனைத்தும் இருந்த பெட்டியை காணவில்லை.
உடனடியாக இரயில் நிலையத்தில் புகார் கொடுக்க சென்ற போது புகாரை எடுக்காமல் பொலீஸ் நிலையம் செல்ல சொன்னார்கள். அருகில் உள்ள பொலீஸ் நிலையம் சென்ற போது மூடிவிட்டதாக கூறி வேறு பொலீஸ் நிலையத்தை குறிப்பிட்டார். மூன்றாவது பொலீஸ் நிலையம் சென்ற போது அங்கு திருட்டு புகார் எடுப்பதில்லை என்றார்கள்.
நான்காவது பொலீஸில் புகார் கொடுத்த போது அவர்கள் எங்களை கண்டுகொள்ளவே இல்லை. அடிமை போல் நடத்தினார்கள். என் கணவரின் பல வருட உழைப்பு அந்த லாப் டாப்பில் இருந்தது என கெஞ்சினோம். சிசிடிவி காட்சிகளை பாருங்கள் என்றோம், அங்குள்ள பொலீஸார் எங்களை காமடியாக கருதி சிரித்தார்கள். இன்று வரை அவர்கள் தேடினார்களா என்று தெரியாது. நாம் தற்போது முதலில் இருந்து மீண்டு வர முயற்சி செய்கிறோம். தயவு செய்து பிரான்ஸ் செல்லும் இந்தியர்கள் அவதானமாக இருங்கள் என குறிப்பிட்டுள்ளார்..!!