கேட்ட வரதட்சணையை கொடுக்காததால் முத்தலாக் கூறி திருமண வாழ்க்கையை முடித்துக் கொண்ட கணவன்..!!
இந்தியாவில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த முகமது தாரிக் என்ற இளைஞன் கணினி பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர் 26 வயதுடைய இளம் பெண் ஒருவரை உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில் கடந்த இரண்டு வருடத்திற்கு முன்னர் திருமணம் செய்துள்ளனர். காதல் திருமணமாக இருந்தாலும், கார், வரதட்சணையாக கொடுக்க கூறி பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அதற்கு பெண் வீட்டாரும் மறுப்பு தெரிவிக்காமல் சம்மதம் தெரிவித்த நிலையில், பெண் வீட்டாரால் காரை கொடுக்க இயலவில்லை.
இதனால் முகமது தாரிக் அடிக்கடி மனைவியுடன் சண்டை பிடித்து வந்தார். அதையடுத்து வரதட்சணை கேட்டு மனைவியை தொந்தரவு செய்து வந்துள்ளான். இதன் காரணமாக இரண்டு குடும்பத்தினருக்கும் இடையில் பெரும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் முகமது தாரிக்கின் மனைவி, தனது பெற்றோரின் இல்லத்திற்கு சென்ற நிலையில், இருதரப்பிலும் சமாதானம் பேசி முடிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் முகமது தாரிக்கின் மனைவி நாம் சேர்ந்து வாழலாம் என்று குறுஞ்செய்தி அனுப்பவே, நான் உன்னுடன் வாழமாட்டேன் என்று முத்தலாக் கூறி பதில் அனுப்பியுள்ளார்.
முகமது தாரிக் கூறிய பதிலைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த நிலையில் அங்குள்ள பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுக்கவே, இது தொடர்பாக புகாரை ஏற்ற பொலிஸார், முகமது தாரிக்கின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.