24 வது பிறந்த நாள் கொண்டாடிவிட்டு சில நிமிடங்களில் துடிதுடித்து இறந்த அப்பாவி பெண்.! கதறி துடிக்கும் பெற்றோர்.!!
பிறந்த நாளிலேயே யுவதி ஒருவர் இறந்த சம்பவம் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.தெலுங்கானா மாநிலம் மஞ்சூரியா மாவட்டத்தை சேர்ந்தவர் பணிக் குமார், இவரது மனைவி, ஜெயலலிதா இருவரும் அம்மாவட்டத்தில் பிரபல மருத்துவர்களாக இருந்து வருகின்றனர், கை ராசிகார டாக்டர்கள் என மக்கள் மத்தியில் பெயர் எடுத்த இவர்கள் ஏழை மக்களுக்கு உதவி செய்வதன் மூலம் பிரபலமாக இருந்து வருகின்றனர்.
இவர்களின் ஒரே மகள் நேஹா, மகளையும் மருத்துவராக்க பெற்றோர் விரும்பிய நிலையில் நேகாவும் நன்றாக படித்து மருத்துவ துறையில் படித்து வந்துள்ளார். கடந்த வாரம் சனிக்கிழமை அன்று நேஹாவிற்கு 24வது பிறந்த நாள். தனது பிறந்த நாளை நண்பர்களுடன் கொண்டாட விரும்பிய நேஹா பெற்றோரின் அனுமதி பெற்று கோவா சென்றுள்ளார்.
அங்கு நண்பர்களுடன் இரவு 12 மணிக்கு நேஹா கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். மகளின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை வீடியோ கால் ஊடாக பார்த்த பெற்றோர் வாழ்த்திவிட்டு உறங்க சென்றுள்ளனர். ஆனால் சில மணி நேரத்தில் நேஹா இறந்துவிட்டதாக நண்பர்கள் அழைப்பை ஏற்படுத்தி கூறியுள்ளனர்.
அதிர்ந்து போன பெற்றோர் உடனடியாக சென்று பார்த்த போது சடலமாக இருந்துள்ளார். முதற்கட்ட விசாரனையில் நேஹாவிற்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. 24 வயதில் அதுவும் பிறந்த நாளில் ஆசை ஆசையாய் வளர்ந்த மகள் இறந்ததை தாங்கிக் கொள்ளாமல் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி துடித்துள்ளனர்.!