திருமணம் முடித்து ஒரே வருடத்தில் கணவரை பிரிந்த கெளதமி..! கமல்ஹாசனின் காதலி ஆனது எப்படி.? இவர் தான் கெளதமியின் நிஜ கணவர்..!!
நடிகை கெளதமி என்றதும் கமலஹாசன் நினைவில் வருவதை யாராலும் மறுக்க முடியாது. அன்றைய சினிமாவின் முன்னணி நாயகிகளில் ஒருவரான கெளதமி கமலஹாசனுடன் சில திரைப்படங்களில் நடித்திருந்த போதும் நண்பர்களாகவே இருந்தனர். இவர்களுக்குள் எப்போது காதல் வந்தது .? கெளமியின் கணவர் என்ன ஆனார்.?
பலரும் அறியாத உண்மைகள் இதோ… சினிமாவில் முன்னணி நாயகியாக இருந்த போது 1998ம் ஆண்டின் ஆரம்பத்தில் கெளதமிக்கும் சந்தீப் என்ற நபருக்கும் மிகப் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உட்பட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
திருமணமாகி கெளதமிக்கு முதல் குழந்தை 1999ம் ஆண்டு பிறந்தது குழந்தைக்கு சுப்புலட்சுமி என பெயர் வைத்தனர். குழந்தை பிறந்த பின் கெளதமி உடல் நலக் குறைவால் அவதி பட்டார். இதனால் சுதீப் கெளதமியிடம் இருந்து விலக நினைத்தார். இருவரும் திருமணமாகி ஒரே வருடத்தில் அதாவது 1999ம் ஆண்டு இறுதியில் சட்டரீதியாக விவாகரத்து செய்து பிரிந்தனர்.
அதன் பின் கெளதமிக்கு திரைப்பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் புற்றுநோயால் பாதிக்கப் பட்டார். இதன் போது கெளதமியுடன் யாரும் இல்லை. தனிமையில் தவித்த கெளதமிக்கு கமலஹாசன் துணையாக நின்றார். மருத்துவ செலவுகள் அனைத்தையும் அவரே கவனித்துக் கொண்டதுடன் அருகில் இருந்து அனைத்து உதவிகளையும் செய்தார்.
இதனால் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட நெருக்கம் லிவிங் டுகெதர் வரை சென்றது. 10 வருடத்திற்கு அதிகமாக சேர்ந்து வாழ்ந்தனர். இந்த நிலையில் கமலஹாசன் பூஜா குமாருடன் நெருக்கமானது தெரிந்து கெளதமி மகள் சுப்புலட்சுமியுடன் தனியாக வாழ சென்றார். தற்போது மகளுடன் வாழ்ந்து வரும் கெளதமி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும், சீரியல்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தும் வருகிறார். .!!