“இனி உண்மையை மறைத்து பயன் இல்லை, சித்ரா மரணத்திற்கு முன் கால் செய்து என்னுடன் பேசியது இது தான்” ஹேமந்தின் தந்தை அதிரடி பேட்டி..!!
சித்துவின் மரணத்தின் மர்மம் இன்னும் முடியாத நிலையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு புது கதைகளுடன் வந்துகொண்டிருக்கின்றனர். இதில் எது உண்மை என்பதை சித்து உயிருடன் வந்தால் மட்டுமே அறிந்துகொள்ள முடியும் என்ற சூழ் நிலை உருவாகி உள்ளது. சித்ராவின் மரணத்திற்கு முக்கிய காரணம் அவரது கணவர் என்று கூறப்படுகின்றது, சிலர் ஹேமந்த் சித்ராவை கொலை செய்துவிட்டார் என்று கூறிவரும் நிலையில் பொலீஸார் சித்துவின் தற்கொலைக்கு ஹேமந்த் தான் காரணம் என வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் ஹேமந்தின் தந்தை சித்துவின் மரணத்திற்கு வேறு காரணம் இருக்கிறது என கூறியுள்ளார். சித்து தற்கொலைக்கு முதல் நாள் ஹேமந்தின் தந்தைக்கு கால் செய்தது போனில் பதிவாகி இருந்தது, இந்த நிலையில் சித்து ஏன் கால் செய்தார் என்பது குறித்து ஹேமந்தின் தந்தை பேட்டி அளித்துள்ளார்.
அதில் சித்ரா இறந்து விட்டார், இனி அவர் வரப்போவதில்லை, அவருக்காக சில விடயங்களை மறைக்க நினைத்தேன், ஆனால் இனி மறைத்தால் என் மகனையும் இழந்துவிடுவேன், அதனால் உண்மையை மறைக்காமல் கூறிவிடுகிறேன், மரணமடைவதற்கு முதல் நாள் எனக்கு கால் செய்து சித்ரா பேசினார்.
அப்போது மாமா வீடு மற்றும் கார் வாங்கிய லோன் கட்டவில்லை, இதனால் சில பிரச்சனைகளை சந்தித்து வருகிறேன், என்ன செய்வதென்று புரியவில்லை, எனக்கு கொஞ்சம் பணம் தேவை கிடைக்குமா என கேட்டார். வீட்டிற்கு வரப் போகும் மருமகள், மற்றும் சித்ரா என்னிடம் கடனாகவே கேட்டார் அதனால் மறுப்பு கூறவில்லை, அடுத்த நாள் காலையில் எடுத்துக் கொள் என்றேன்.
அவர் கேட்ட பணத்தையும் தயார் செய்தே வைத்திருந்தேன், ஆனால் அடுத்த நாள் காலையில் அவரது மரண செய்தியே வந்தது, சித்து கால் செய்து ஹேமந்த் பற்றி பேசவில்லை, ஹேமந்த் அவருக்கு எந்த கொடுமையும் செய்யவில்லை, அவருக்கு வேறு யாரோ மிரட்டல் விடுத்து இருக்கலாம், அல்லது வேறு பிரச்சினை இருந்து இருக்கலாம், அவர் பிரபலம் அவரது மரணத்திற்கு என் மகன் காரணம் அல்ல, காரணம் வேறு என கூறியுள்ளார்.!!