உயிருக்கு போராடும் இயக்குனரை கண்டுகொள்ளாத நடிகை ஸ்ருதிஹாசன்.,! ஒருவர் மரண படுக்கையில் இருக்கும் போது இத்தனை வன்மமா என திட்டும் ரசிகர்கள்.!
மரணத்துடன் போராடும் இயக்குனர் ஜெகநாதனை நடிகை ஸ்ருதிஹாசன் கண்டுகொள்ளாமல் இருப்பதாக குற்றச் சாட்டுகள் குவிந்து வருகிறது. இயற்கை, பேரான்மை போன்ற சிறந்த திரைப்படங்களை மக்களுக்கு கொடுத்தவர் இயக்குனர் ஜெகநாதன், அண்மையில் திடீரென மயங்கி விழுந்த இவரை வைத்தியசாலையில் அனுமதித்த போது இவர் மூளைச் சாவு அடைந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருகிறது. இந்த நிலையில் திரை துறையை சார்ந்த பலர் ஜெகநாதன் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்து வரும் நிலையில் ஜெகநாதனின் இறுதி படமான லாபம் திரைப்பட குழுவினரும் நேரடியாக சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி உள்ளனர்.
ஆனால் லாபம் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த ஸ்ருதி ஹாசன் செல்லவில்லை. அத்துடன் ஜெகநாதன் பற்றிய எந்த கருத்தும் வெளியிடவில்லை..இதற்கான காரணம் ஜெகநாதன் இறுதியாக கொடுத்த பேட்டி என கூறப்படுகின்றது.
அவர் கொடுத்த பேட்டியில் லாபம் படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது இறுதி சில காட்சிகள் ஸ்ருதிஹாசன் நடிக்கவில்லை என்றும், ஹீரோவுடன் கோபத்தில் யாருக்கும் சொல்லாமல் படபிடிப்பில் இருந்து சென்று விட்டர் எனவும், இது சிறந்த நடிகையின் செயல் இல்லை எனவும் விமர்சித்து இருந்தார். இதனை மனதில் வைத்தே ஸ்ருதிஹாசன் ஜெகநாதனை கண்டுகொள்ளாமல் இருக்கிறார் என விமர்சனங்கள் எழுந்துள்ளது.!