நடிகை காஜலை திருமணம் செய்து பின் வேறு பெண்ணை திருமணம் செய்த சாண்டி மாஸ்டர்..! காஜலின் கண்ணீரை பாருங்கள்..!
நடிகை காஜல் பற்றி பலருக்கு தெரியும். எப்போதுமே போதையில் இருப்பது போல் பேசுவார், கவர்ச்சியாய் ஆடை அணிவார். எல்லோரிடமும் சண்டை போடுவார், ஆண் போல் நடந்துகொள்வார், யாரிடம் கேட்டாலும் காஜலை பற்றி அவர்கள் சொல்வது இது தான். ஆனால் காஜல் கடந்து வந்த பாதை கொடூரமானது. தொகுப்பாளினியாக தனது பயணத்தை ஆரம்பித்த காஜலின் குரல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தியது. ரேடியோவில் முகம் தெரியாதே அதனால் பலருக்கும் காஜலை பிடித்துப் போனது.
அதன் பின் தொலைகாட்சி நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்க ஆரம்பித்தார். அதன் போது தான் சாண்டியை சந்திந்தார். முதலில் இருவரும் நல்ல நண்பர்களாக பழகினார்கள். காஜலுக்கு சாண்டியை பிடித்திருந்தது. அதே போல் தான் சாண்டிக்கும் ஆனால் இருவரும் தங்கள் காதலை வெளிப்படுத்தவில்லை,திடீரென ஒரு நாள் காஜலுக்கு திருமணம் செய்து வைக்கப் போவதாக வீட்டில் கூறினார்கள். காஜலின் மனதில் சாண்டி இருந்ததால் சாண்டியிடம் சென்ற காஜல் நாங்க கல்யாணம் செய்யலாமா என கேட்க
சாண்டியும் தன் காதலை கூற இருவரும் திருமணம் செய்துகொண்டனர். காஜலுக்கு சாண்டியின் அன்பு தேவைப்பட்டது ஆனால் சாண்டி நடனம் நடனம் நடனம் தான். காஜலுடன் நேரம் செலவு செய்ய சாண்டியால் முடியவில்லை, எந்த நேரமும் பெண்களுடன் நடனம்…இதனை காஜலால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்த பின்பும் சாண்டி பெண்கள் அருகில் தான் இருந்தார் காஜலின் அருகில் இல்லை.
இதனை காஜல் கேட்டால் பிரச்சனை வெடித்து விடும். சண்டை காரி, என கூறி அவரை மனம் நோகும் படி திட்டி தீர்ப்பதே சாண்டியின் வேலை, சினிமாவில் சிறு சிறு வேடங்களில் ஒரு பாடலில் என நடித்துக் கொண்டிருந்தார் காஜல். சாண்டிக்கு காஜல் மேல் வெறுப்பு அதனால் தினமும் சண்டை இறுதியில் விவாரத்தில் முடிந்தது. விவாகரத்து செய்த பின் காஜல் கவலையை மறக்க பிக் பாஸ் சென்றார்.
காஜல் பிக் பாஸில் இருக்கும் போது சாண்டி வேறு பெண்ணை திருமணம் செய்தார். வெளியே வந்ததும் மனம் உடைந்தார் காஜல். காஜல் பற்றி சாண்டியிடம் கேட்ட போது அது ஒரு நரக வாழ்க்கை, அதை மறந்து நிம்மதியாக இருகின்றேன் என்றார். காஜலிடம் சாண்டி பற்றி கேட்ட போது அவர் மிகவும் நல்லவர்
எங்கு இருந்தாலும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். என் உயிர் உள்ள காலம் வரை சாண்டியை மட்டுமே நினைத்திருப்பேன் என கூறி கண் கலங்கினார். சாண்டி இப்போது பெரிய டான்ஸ் மாஸ்டர். ஆனால் காஜல் இரண்டு பிள்ளைகளுடன் பலரின் வெறுப்பில் வாழும் பெண். இது தான் வாழ்க்கை..!
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”