முடிவுக்கு வந்த கலாபவன் மணியின் மர்ம மரணம்..! இதனால் தான் மரணம் ஏற்பட்டுள்ளதாம்..!!
மலையாளம் தமிழ் உட்பட ஏராளமான திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தவர் நடிகர் கலாபவன் மணி. சாதாரண குடும்பத்தில் இருந்து சினிமாவில் கால் பதித்த இவர் ஜெமினி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நெருக்கமானார், வில்லன், காமெடியன், குணச்சித்திர நடிகர், ஹீரோ, என அசத்திய கலாபவன் மணி,
மூன்று வருடங்களுக்கு முன்பு கொச்சியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இவர் ஏற்கனவே கல்லீரல் பாதிப்பால் அவதி பட்டு வந்த நிலையில் மது அருந்தியதால் மரணமடைந்ததாக மருத்துவ பரிசோதனை அறிக்கை வெளியானது. ஆனால் தங்கள் சகோதரனின் மர்மம் இருப்பதாக கூறி அவரது உடன் பிறப்புகள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை ஐகோர்ட் சிபிஐ நீதிமன்றத்திற்கு மாற்றியது. இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ தங்கள் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. இதில் கலாபவன் மணியின் மரணத்தில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை என்றும் ஏற்கனவே கல்லீரல் பாதிப்பு உள்ள நிலையில் வைத்தியர்கள் மது அருந்த வேண்டாம் என கூறி இருந்தும்.
அதனை கண்டுகொள்ளாத கலாபவன் மணி சம்பவ தினத்தில் அதிகமாக மது அருந்தியதால் இயற்கையாகவே குறித்த மரணம் நிகழ்ந்துள்ளது எனவும் குறிப்பிடப் பட்டுள்ளது. இந்த வழக்கு இயற்கை மரணம் என தீர்ப்பானதை தொடர்ந்து கலாபவன் மணியின் மரணம் குறித்த சந்தேகங்கள் முடிவுக்கு வந்துள்ளது..