உத்தியோகபூர்வமாக பணியை ஆரம்பித்தார் வட மாகாண ஆளுநர்!
வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், தமது பணிகளை இன்று ஆரம்பித்தார்.
ஜனாதிபதித் தேர்தல் முடிந்த நிலையில், ஒவ்வொரு மாகாணங்களுக்கும் ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர். எனினும், வட மாகாண ஆளுநர் பதவி வெற்றிடமாக இருந்தது.
இந்நிலையில், அண்மையில் ஜனாதிபதி முன்னிலையில் பி.எஸ்.எம். சார்ள்ஸ் வடமாகாண ஆளுநர் பதவியைப் பொறுப்பேற்றார்.
இதன் தொடர்ச்சியாக அவர் தனது பணிகளை இன்று, யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளார்.